கிளரண்டன் ஐயப்பன் ஆலயத்தில் மஞ்சள் மாத பூஜை

கிளரண்டன் ஐயப்பன் ஆலயத்தில் மஞ்சள் மாத பூஜை

கிளரண்டன் கீழ் பிரிவில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் மஞ்சள் மாத சிறப்பு பூஜை நேற்று இரவு (07) நடைபெற்றது.

இதில்  திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மஞ்சள் மாத அம்மனை தரிசனம் செய்தனர்.

விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு அதனை தொடர்ந்து பஜனை பாடி, படி பூஜை நடைபெற்றது.

ஐயப்பன் பூஜை இடம்பெற்று ஐயப்பன் பஜனை நடைபெற்ற பின் மஞ்சள் மாத விசேட பூஜை தொடர்ந்து பூஜையில் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் திரண்டு வந்து கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து  சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் நெய் தேங்கை வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு விபூதி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டு விஷேட அபிஷேகத்துடன் ஐயப்பன் பூஜைகள் நிறைவுபெற்றன.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )