நுகேகொடை கூட்டத்தில் களமிறங்குவாரா சாணக்கியன்?

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டு எதிரணியின் அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்குமாறு எனக்கு தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், நான் அதில் பங்கேற்கமாட்டேன் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
அத்துடன், தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எமது கட்சியும் அதில் பங்கேற்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் தமிழரசுக் கட்சி கடுமையான தீர்மானமொன்றை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
