மக்கள் யார் பக்கம்? மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுன வலியுறுத்து

மக்கள் யார் பக்கம்? மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுன வலியுறுத்து

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.

என்.பி.பி. அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது என்பதை நுகேகொடைக் கூட்டம் வெளிப்படுத்தியது என்பதை சுட்டிக்காட்டியே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

“ நுகேகொடை கூட்டம் வெற்றியளித்துள்ளது. பொய்கள்மூலம் இனியும் நாட்டை ஆளமுடியாது என்பதை இனியாவது ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது.

அவ்வாறு இல்லை, மக்கள் ஆதரவு தமக்கு இருக்கின்றது என அரசாங்கம் கூறுமானால், அதன் உண்மை தன்மை என்னவென்பதை அறிய மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )