பாலச்சந்திரனின் மரணத்திற்கு யார் பொறுப்பு? தென்னிலங்கை சட்டத்தரணி, ஜனாதிபதி அநுரவிடம் கேள்வி

பாலச்சந்திரனின் மரணத்திற்கு யார் பொறுப்பு? தென்னிலங்கை சட்டத்தரணி, ஜனாதிபதி அநுரவிடம் கேள்வி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணத்திற்கு யார் பொறுப்பு? என தென்னிலங்கை சிங்கள இளம் சட்டத்தரணி ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் வடக்கு கிழக்கு உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், தென்னிலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்றிருந்தார்.

“முள்ளிவாய்க்கால் மண்ணை புண்ணிய பூமி என சுட்டிக்காட்டியிருந்த அவர், இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து அவர்களது உறவினர்கள் சுடர் ஏற்றி வழிபடுகின்றனர்” எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவர் பேசிய இந்த காணொளி முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அது மிகவும் வைரலானது. மேலும் அவரின் கருத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது தனது முகநூல் பக்கத்தில் பாலச்சந்திரனின் புகைப்படத்தை பதிவிட்டுள்ள இளம் சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே, பாலச்சந்திரனின் மரணத்திற்கு யார்? பொறுப்பு எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

போரைப் பற்றி எதுவும் தெரியாத, 12 வயது குழந்தையைக் கைது செய்து, பின்னர் இராணுவ காவலரன் ஒன்றில் சாப்பிட பிஸ்கட் கொடுத்த பின்னர் சுட்டுக் கொன்றதற்கு யார் பொறுப்பு? தோழர் ஜனாதிபதி அவர்களே? என பதிவிட்டுள்ளார்.

 

 

Share This