100 நாள் வேலை திட்டம் குறித்த புதிய சட்டத்தை திரும்பப் பெற வைப்போம் – ஸ்டாலின் உ றுதி

100 நாள் வேலை திட்டம் குறித்த புதிய சட்டத்தை திரும்பப் பெற வைப்போம் – ஸ்டாலின் உ றுதி

நூறு நாள் வேலைத் திட்​டம் தொடர்​பாக மத்​திய அரசு கொண்டு வந்​துள்ள புதிய சட்​டத்​தை, மக்​கள் சக்​தி​யுடன் திரும்​பப் பெற வைப்​போம் என தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​யுள்ளார்.

நெல்லை பாளை​யங்​கோட்டை அரசு மருத்​து​வக் கல்​லூரி மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற அரசு விழா​வில் 694 கோடி ரூபா மதிப்​பிலான 33 முடிவுற்ற திட்​டப் பணி​களை திறந்து வைத்த முதல்​வர் ஸ்டா​லின், 11 புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

தொடர்ந்​து, 45,477 பயனாளர்களுக்கு நலத்​திட்ட உதவி​கள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த மு.க.ஸ்​டா​லின்,

கீழடி தொடங்கி பல வரலாற்று இடங்​களில் மேற்​கொள்​ளும் அகழாய்​வு​களுக்​கு, மத்​திய பாஜக அரசு பல்​வேறு தடைகளை ஏற்​படுத்​திக் கொண்டே இருக்​கிறது.

தமிழர்​களின் வரலாற்​றுத் தொன்​மையை நிரூபிக்​கும் ஆய்​வு​கள் நடை​பெறக் கூடாது, மீறி நடந்​தா​லும், முடிவு​கள் வெளியே வரக் கூடாது என்​பது​தான் அவர்​களது எண்​ணம்.இல்​லாத சரஸ்​வதி நதி நாகரி​கத்​தைத் தேடி அலைபவர்​களுக்​கு, நமது ஆய்​வு​கள் தெரிவ​தில்​லை. நம் வரலாற்றை விட்​டுக்​கொடுக்க முடி​யாது.

ஈரா​யிரம் ஆண்​டு​கால சண்​டை​யில் நாம் தோல்வி அடைந்​து​விட மாட்​டோம். அதற்​காகத்​தான் அருங்​காட்​சி​யகங்​களை அமைத்து வரு​கிறோம் .2021 மத்​திய பட்​ஜெட்​டில் ஆதிச்​சநல்​லூர் அருங்​காட்​சி​யகம் அமைப்​பது தொடர்​பான அறி​விப்பு வெளி​யானது. ஆனால், இது​வரை பணி​களைத் தொடங்​க​வில்​லை.

திமுக ஆட்​சிப் பொறுப்​புக்கு வந்த பிறகு சிவகளை உள்​ளிட்ட இடங்​களில் அகழாய்வு மேற்​கொண்​டு, தற்​போது உலகமே திரும்​பிப் பார்க்​கக்​கூடிய அளவுக்கு பொருநை அருங்​காட்​சி​யகத்தை உரு​வாக்கி இருக்​கிறோம்” என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )