
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னல் தாக்கம் குறித்து செம்மஞ்சள்
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த இடங்களில் இடியுடன் கூடிய மழை பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்
தொடர்பில் பொதுமக்கள அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
