
ஈரானிய வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் அவசர தொலைபேசி உரையாடல்
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றம் குறித்து இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
மோதல்களைத் தவிர்த்து, பிராந்தியத்தில் அமைதியை மீண்டும் நிலைநாட்ட இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் இதன்போது வலியுறுத்தினார்.
