போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுக்கு 15 அம்சத் திட்டத்தை முன்மொழிந்துள்ள அமெரிக்கா

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுக்கு 15 அம்சத் திட்டத்தை முன்மொழிந்துள்ள அமெரிக்கா

இஸ்ரேல், ஈரான், அமெரிக்க போர் ஒரு மாதத்தை எட்டவுள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுக்கு 15 அம்சத் திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.

1. ஈரான் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்குதல்.
2. ஒரு குடிசார் அணுசக்தித் திட்டத்தை (மின்சார உற்பத்தி) முன்னெடுத்துச் செல்வதற்கும் மேம்படுத்துவதற்கும் அமெரிக்காவின் உதவி.
3. தடைகள் மீண்டும் விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தலை நீக்குதல்.
4. ஈரானின் அணுசக்தித் திட்டம் ஒரு வரையறுக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ் முடக்கப்பட்டுள்ளது.
5. செறிவூட்டப்பட்ட யுரேனியம் மேற்பார்வை மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டுத் தொடர்ந்து இருக்கும்.
6. ஏவுகணைத் திட்டம் பிற்காலத்தில், அதன் அளவு மற்றும் வீச்சு மீதான வரம்புகளுடன் கையாளப்படும்.
7. அணுசக்தித் திட்டங்களின் பயன்பாடு குடிசார்/தற்காப்பு நோக்கங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்படும்.
8. தற்போதுள்ள அணுசக்தித் திறன்களின் மேம்பாடு நிறுத்தப்படும்.
9. செறிவூட்டும் திறன்களை மேலும் விரிவுபடுத்தக் கூடாது.
10. ஈரானிய மண்ணில் ஆயுதத் தரத்திலான அணுப் பொருட்களை உற்பத்தி செய்யக் கூடாது.
11. செறிவூட்டப்பட்ட அனைத்துப் பொருட்களும் ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குள் சர்வதேச அணுசக்தி முகமையிடம் (IAEA) ஒப்படைக்கப்படும்.
12. நடன்ஸ், இஸ்பஹான் மற்றும் ஃபோர்டோ ஆகியவை பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும் (அழிக்கப்படும்).
13. சர்வதேச கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்பு வழிமுறைகள் அமல்படுத்தப்படும்.
14. இணக்கத்துடன் கூடிய படிப்படியான செயலாக்கம்.
15. இரு தரப்பினருக்கும் இடையேயான கூடுதல் பிராந்திய மற்றும் பாதுகாப்பு உடன்பாடுகள்.

அமெரிக்கா தன் நிலைப்பாட்டில் இருந்து மாறவே இல்லை மாறவும் முடியாது ஏன் என்றால் இது தான் அமெரிக்கா என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஈரான் இதகுறித்து எவ்வித பதிலையும் இதுவரை வழங்கவில்லை என்பதுடன், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் அடிப்பணியாதென சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )