
மீட்கப்பட்ட ஈரானிய கப்பல் மாலுமிகளை திருப்பி அனுப்பக்கூடிய கூடாது ; இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்
இலங்கையின் கடல்பரப்புக்கு அருகில் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து உயிர் பிழைத்தவர்களையும், இலங்கையின் காவலில் உள்ள இரண்டாவது ஈரானியக் கப்பலின் மாலுமிகளையும் ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கத் தூதரகத்தின் வர்த்தகப் பிரதிநிதி ஜேன் ஹோவெல் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
கடந்த புதன்கிழமை, இலங்கையின் தெற்குத் துறைமுக நகரான காலியில் இருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் ஈரானின் IRIS Dena போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மூழ்கடித்தது. இதில் பல மாலுமிகள் கொல்லப்பட்டதுடன், பலர் நீரில் மூழ்கினர்.
அத்துடன், இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் சிக்கியிருந்த ஈரானின் IRIS Booshehr என்ற துணைப் போர்க்கப்பலில் இருந்த 208 மாலுமிகளை இலங்கை கடற்படை நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மீட்டு திருகோணமலை துறைமுகத்துக்கு அழைத்துவந்தது.
சர்வதேச கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தங்களின் பிரகாரம் ஆபத்தில் இருக்கும் கப்பல்களுக்கு உதவியளிக்க இலங்கை இணக்கப்பாடுகளை எட்டியுள்ளதாகவும் மாலுமிகளை ஏற்றுக்கொள்வது தமது நாட்டின் “மனிதாபிமானப் பொறுப்பு” என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த விடயம் தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் வர்த்தகப் பிரதிநிதி ஜேன் ஹோவெல் (Jayne Howell), மீட்கப்பட்ட 32 ‘டெனா’ மாலுமிகளையும், ‘பூஷெர்’ கப்பல் மாலுமிகளையும் ஈரானுக்குத் திருப்பி அனுப்பக் கூடாது என இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்:
கைது செய்யப்பட்டவர்களை ஈரான் தனது தேவைக்காக பயன்படுத்துவதைத் தடுக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து இலங்கை்கான இஸ்ரேலியத் தூதுவரிடமும் ஜேன் ஹோவெல் பேசியுள்ளார்.

