மலையக ரயில் சேவைகள் வழமைக்கு

கலபட மற்றும் வட்டவளை ரயில் பாதைக்கு இடையே மரங்கள் வீழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மலையக ரயில் சேவைகள் இன்று (31) காலை முதல் வழமை போன்று இயக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
நேற்று இரவு 9.00 மணியளவில் ரயில் பாதையில் வீழ்ந்த மரங்களை ரயில்வே பணியாளர்களால் அகற்ற முடிந்தது, பின்னர் இன்று காலை முதல் ரயில் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்ததாக கட்டுப்பாட்டு அறை மேலும்தெரிவித்துள்ளது.