துறைமுக நகர செயற்கை கடலில் பல்கலை மாணவர் மாயம்

கொழும்பு துறைமுக நகரில் உள்ள செயற்கை கடற்கரையைச் சேர்ந்த கடலில் நீந்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காணாமல் போனவர், கம்பஹாவின் அஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று நேற்று (26) காலை ஸ்நோர்க்கல் அணிந்து கடலில் நீந்தி, கடல் தரையை ஆய்வு செய்து கொண்டிருந்த போதே, மாணவர் ஒருவர் இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
பின்னர், அவர் அணிந்திருந்த ஸ்நோர்க்கல், உயிர்காக்கும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
காணாமல் போனவரைத் தேடுவதற்காக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையம், கடற்படைப் பிரிவின் மூழ்காளர்கள் மற்றும் ரங்கல கடற்படை மூழ்காளர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.