UEFA நேஷன்ஸ் லீக் – இறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி போர்த்துகல் வாகை சூடியது

UEFA நேஷன்ஸ் லீக் – இறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி போர்த்துகல் வாகை சூடியது

போர்த்துகல் அணி ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி UEFA நேஷன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இறுதி நிமிடம் வரை நீடித்த போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுகல் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரு அணிகளும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தலா இரண்டு கோல்கள் அடித்து சமநிலையில் இருந்ததால் போட்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்றது.

போட்டியின் 21வது நிமிடத்தில் மார்ட்டின் ஜூபிமெண்டி அடித்த கோல் மூலம் ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது. எனினும், அடுத்த ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, நுனோ மென்டிஸ் போர்த்துகல் அணிக்காக கோல் அடித்து சமநிலையை படுத்தினார்.

முதல் பாதி முடியும் தருவாயில் 45வது நிமிடத்தில் மைக்கேல் ஓயர்சபால் கோல் அடித்து ஸ்பெயினை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு வந்தார்.

இதனால் போட்டியின் முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி முன்னிலைப் பெற்றது. எனினும், இரண்டாம் பாதியில் 61வது நிமிடத்தில் போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து அசத்தினார்.

இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலைபெற்றது. பின்னர், இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றன, ஆனால் பயனில்லை. இறுதியில் ஷூட் அவுட் முறையில் போர்த்துகல் அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.

ஷூட் அவுட்டில் போர்த்துகல் சார்பாக கோன்சாலோ ராமோஸ், விடின்ஹா, புருனோ பெர்னாண்டஸ், நுனோ மென்டிஸ் மற்றும் ரூபன் டயஸ் ஆகியோர் கோல் அடித்தனர்.

ஸ்பெயின் சார்பாக மைக்கேல் மெரினோ, அலெக்ஸ் பேனா மற்றும் இஸ்கோ ஆகியோரும் கோல் அடித்திருந்தனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முறையாக போர்த்துகல் அணி UEFA நேஷன்ஸ் லீக் கிண்ணத்தை கைபற்றியிருந்தது.

இந்நிலையில், இரண்டாவது முறையாக அந்த அணி UEFA நேஷன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share This