யாழ் . பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அஞ்சலி

யாழ் . பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் , யாழ் பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்

நினைவு தூபி முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் , முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை செய்ததுடன் , அவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, முள்ளிவாய்க்கால் வாரத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரத்த தான நிகழ்வுகள் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This