கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் தடம் புரள்வு

கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் தடம் புரள்வு

கரையோர ரயில் மார்க்கத்தின் கிங்தொட்ட ரயில் நிலையத்தில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளது.

மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற 8056A காலி குமாரி கடுகதி ரயிலே தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், கரையோர ரயில் மார்க்க போக்குவரத்து அம்பலாங்கொடை ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் தடம் புரண்டமையினால் ரயில் மார்க்கத்திற்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This