துசித ஹல்லொலுவவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இதன்படி, எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.