இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி

இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி

வடகிழக்கு பருவமழை நாட்டின் ஊடாக படிப்படியாக நிலைநிறுத்தப்பட்டு வருவதால், இன்று வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில்
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து
அவதானத்துடன் செயற்படுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )