இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக சில கருப்பு ஆடுகள்: கட்சி தலைவர் சி.வீ.கே சிவஞானம் சூளுரை

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வீ.கே சிவஞானம், இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக சில கறுப்பு ஆடுகளின் செயற்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அவர்கள் மீது தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சி.வீ.கே சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை தெரிவித்தார்.
மேலும், அவர் தெரிவிக்கையில்,
இவ் விடயம் தொடர்பாக கட்சி சார்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வடக்கு பிரதேச சபையில் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமது உறுப்பினர் தமிழ் தேசியத்தோடு ஒன்றினைந்து செயற்படுவார் எனவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.