சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 500,000 ஐ கடந்தது

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 500,000 ஐ கடந்தது

இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 500,000 ஐ கடந்துள்ளது.

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 505,751 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை 228,424 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் பெப்ரவரி மாதத்தின் கடந்த இறுதி 3 வாரங்களில், ஒவ்வொரு வாரமும் சுற்றுலாப் பயணிகளின் வருகை 70,000 ஐ கடந்துள்ளது.

இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, இந்தியாவிலிருந்து மாத்திரம் 89,277 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )