தமிழக அரசின் சனாதன விரோதப் போக்கு: மக்களவையில் பாஜக எம்.பி. அனு​ராக் தாக்குர் குற்றச்சாட்டு

தமிழக அரசின் சனாதன விரோதப் போக்கு: மக்களவையில் பாஜக எம்.பி. அனு​ராக் தாக்குர் குற்றச்சாட்டு

திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப விவ​காரத்​தில் தமிழக அரசை பாஜக எம்​.பி. அனு​ராக் தாக்​குர் நேற்று விமர்​சனம் செய்​தார்.

சனாதன விரோதப் போக்கை தமிழக அரசு கடைப்​பிடிப்​ப​தாக அவர் சாடி​னார்.

மதுரை, திருப்​பரங்​குன்​றம் மலை​யில் கார்த்​திகை தீபம் ஏற்​று​வது தொடர்​பாக சர்ச்சை நிலவி வரு​கிறது. இந்த விவ​காரத்தை மக்​களவை​யில் பாஜக எம்​.பி. அனு​ராக் தாக்​குர் நேற்று எழுப்​பி​னார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: இந்​தி​யா​வின் ஒரு மாநிலம் சனாதன விரோத நிலைப்​பாட்​டின் அடை​யாள​மாக மாறி​யுள்ள ஒரு முக்​கியப் பிரச்​சினையை நான் இங்கு எழுப்ப விரும்​பு​கிறேன். அம்​மாநில அமைச்​சர்​கள் சனாதன தர்​மத்​திற்கு எதி​ராக பேசி வரு​கின்​றனர். கோயிலுக்​குள் நுழைய நீதி​மன்ற தலை​யீட்டை நாட வேண்​டிய கட்​டா​யம் பக்​தர்​களுக்கு ஏற்​பட்​டது.

மதுரை திருப்​பரங்​குன்​றம் கோயி​லில் கார்த்​திகை தீபம் ஏற்​று​வது தொடர்​பான உத்​தரவை அதி​காரி​கள் வேண்​டுமென்றே புறக்​கணித்​த​தாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் மதுரை கிளை கடும் கண்​டனம் தெரி​வித்​தது.

இந்த சம்​பவத்​தின் போது பக்​தர்​கள் மீது காவல்​துறை நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. இந்​துக்​கள் மீது தடியடி நடத்​தப்​பட்​டது. இந்​துக்​கள் ஏன் தடுக்​கப்​படு​கிறார்​கள்? இவ்​வாறு அனு​ராக் தாக்​குர் பேசி​னார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )