தமிழ், சிங்கள மொழிகளை பாடசாலைகளில் கட்டாயமாகத் திட்டம்

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளை இரண்டாவது மொழிகளாகக் கற்கும் கொள்கையை வகுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழை இரண்டாவது மொழியாகவும், தமிழ் மாணவர்கள் சிங்களத்தை இரண்டாவது மொழியாகவும் கற்கச் செய்ய வேண்டும். இது கட்டாயமாக்கப்படும். ஆசிரியர்களுக்கு மொழிகளைக் கற்பிக்க பயிற்சி அளிக்கும் வரை இந்தத் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாக மேற்கொள்ளப்படும்‘‘ என்றும் அவர் கூறினார்.