Tag: Tamil
களுத்துறையின் சில பகுதிகளுக்கு தற்காலிக நீர் விநியோகத் தடை
களுத்துறையில் உள்ள மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் தற்காலிக நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 294 ரூபா 50 சதமாக ... Read More
தேங்காய் பற்றாக்குறைக்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே காரணம் – பிரதமர்
தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறைக்குக் காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இது ... Read More
மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகளை குறைத்த அரசாங்கம் – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் அதிகாரிகளை குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை அடுத்த மாதம் 19 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் ... Read More
டயானாவுக்குப் பிடியாணை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்குப் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. டயானா கமகே, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ... Read More
நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், சிறப்புரிமைகள் மீறப்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், சிறப்புரிமைகள், நிலையியற் கட்டளைகள் என சகலதும் இன்று மீறப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இங்கு ... Read More
பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
பட்டதாரிகள் 35,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இன்று புதன்கிழமை ... Read More
மத்தள சர்வதேச விமான நிலையத்தால் பெரும் நட்டம்
மத்தள சர்வதேச விமான நிலையத்தால் வருடாந்தம் 3 தசம் 2 பில்லியன் ரூபா நட்டத்தை தொடர்ச்சியாக எதிர்நோக்குவதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நட்டத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு ... Read More
மன்னாரில் பல லட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
மன்னார் , மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார்- அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய ... Read More
இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்ட பறவைகள் – மூவர் கைது
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகக் கொண்டுவரப்பட்ட பறவைகள், மற்றும், மருந்து பொருட்களுடன் மூவர் நேற்று கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் கரிசல் பகுதியில் பறவைகள் மற்றும் மர அணில்களை வாகனத்தில் ஏற்றும் பொழுது நேற்று ... Read More
மஹிந்தவை சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். கொழும்பில் உள்ள விஜேராம இல்லத்தில் இன்று புதன்கிழமை காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மரியாதை நிமித்தம் சந்திப்பு இடம்பெற்றதாக ... Read More
EPF தொடர்பில் விசேட அறிவிப்பு
ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவுசெய்யும் புதிய நடைமுறை தொழில் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார். இதற்காக, 0112 201 201 என்ற ... Read More












