Tag: Tamil
மாத்தறை தெவிநுவர துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – சந்தேகநபர்கள் நால்வர் கைது
மாத்தறை தெவிநுவர பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ பகுதியில் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவத்திற்கு ... Read More
நியாயமான விலையில் தரமான உணவு – உணவகங்களை நிறுவும் புதிய வேலைத்திட்டம்
தரமான உணவை நியாயமான விலையில் வழங்குவதற்கான உணவகங்களை நிறுவும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நாடளாவிய ரீதியில் ... Read More
மோடியின் வருகை தொடர்பிலான தகவல்களை வெளியிட்ட வெளிவிவகார அமைச்சு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பிற்கிணங்க இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என வெளிவிவகார ... Read More
செங்கடலில் மூழ்கிய சுற்றுலாப் பயணிகளுக்கான நீர்மூழ்கிக் கப்பல் – அறுவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
செங்கடலில் சுற்றுலாப் பயணிகளுக்கான நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் சுமார் அறுவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. எகிப்திய நகரமான ஹுர்காடா கடற்கரையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். சிந்த்பாத் ... Read More
சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல்
நீதிமன்றில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு இரண்டு வழக்குகளில் பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும், மற்றுமொரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி, சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ... Read More
பிரித்தானியாவின் தடை குறித்து கருணா அம்மான் பேச்சு
எமது கூட்டமைப்பை கண்டு “வற்றிய குளத்தில் சுங்கான் மீன் கொதிப்பது போல் கொதித்துக் கொண்டிருக்கின்றார்கள்” குறிப்பாக வெளிநாட்டில் இருப்பவர்களும் கொதிக்கின்றார்கள் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி ... Read More
சாமர சம்பத் தசநாயக்க பிணையில் விடுவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து அவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில், ... Read More
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் குருநாகல், கண்டி, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கே மின்னல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ... Read More
களியாட்ட விடுதி மோதல் சம்பவம் – கைதானவர்களுக்கு விளக்கமறியல்
கொழும்பு கொம்பனி தெரு பகுதியிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அன்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாத ... Read More
உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை வர்த்தமானியில் வெளியீடு
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வேட்பாளர் ஒருவர் வாக்காளர் ஒருவருக்கு 74 ரூபா முதல் 160 ரூபாவிற்கு இடைப்பட்ட தொகையை செலவிட முடியும் என ... Read More
இறப்பர் பாலை ஏற்றிச் சென்ற பவுசர் கவிழ்ந்து விபத்து – இருவர் பலி
களுத்துரை - பதுரலிய நோக்கி இறப்பர் பாலை ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று, கொடிப்பிலிகந்த சமன் தேவாலயத்திற்கு அருகில் சுமார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து நேற்று ... Read More












