Tag: news

அபாயமிக்க மரங்களை அகற்றுவதற்காக 05 விசேட குழுக்கள்

admin- June 1, 2025

அபாயமிக்க மரங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதற்காக 05 விசேட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்தது. பலத்த மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மரங்கள், ... Read More

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை அண்மித்தது

admin- June 1, 2025

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை அண்மித்துள்ளது. ஹொங் கொங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் தலை தூக்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவிலும் மே ... Read More

உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியீடு

admin- June 1, 2025

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி நிறுவனங்களின் நகர முதல்வர்கள்,பிரதி நகர முதல்வர்கள், தவிசாளர்கள் மற்றும் பிரதி தவிசாளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி, 22 மாவட்டங்களுக்கு ... Read More

வானிலையில் மாற்றம்

admin- June 1, 2025

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது ... Read More

03 கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடைய போதைப்பொளுடன் இளைஞர் ஒருவர் கைது

admin- June 1, 2025

கம்பஹா மாவட்டத்தில் 03 கிலோகிராம் 655 கிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சந்தேகநபர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது ​​போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வேன் ... Read More

மலையக மார்க்கத்திலான ரயில் சேவை பாதிப்பு

admin- June 1, 2025

கலபொட ரயில் நிலையம் அருகே ரயிலொன்று தடம்புரண்டதால் , மலையக ரயில் பாதையின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் இரவு நேர தபால் ரயிலே ... Read More

61,000 இற்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவு

admin- May 31, 2025

இன்று பிற்பகல் 03 மணியுடன் நிறைவடைந்த 43 மணி நேரத்திற்குள் இலங்கையில் 61,000 இற்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளை பாதித்த பலத்த மழை ... Read More

கொலன்னாவை பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட பிரதியமைச்சர்

admin- May 31, 2025

பலத்த மழை மற்றும் காற்று காரணமாக கொலன்னாவை பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதியமைச்சர் எரங்க குணசேகர நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகள் தொடர்பிலும் அவர் இதன்போது ஆராய்ந்தார். மீதொட்டமுல்ல, சேதவத்தை, ... Read More

அனுதி குணசேகரவுக்கு ஜனாதிபதி வாழ்த்து

admin- May 31, 2025

72 ஆவது உலக அழகிப் போட்டியின் பிரம்மாண்டமான இறுதிப் போட்டி இன்று (31) இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இன்றைய இறுதிப் போட்டியில் இலங்கையை ... Read More

சீரற்ற வானிலையால் சேதமடைந்த வீடுகளுக்கு1,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

admin- May 31, 2025

சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பேரிடர் காரணமாக முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு 2.5 மில்லியன் ரூபாவும், பகுதியளவு சேதமடைந்த ... Read More

காத்தான்குடியில் தீப்பரவல் காரணமாக பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதம்

admin- May 31, 2025

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் இன்று (31) நண்பகல் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் ... Read More

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 120 குழுக்கள் கடமையில்

admin- May 31, 2025

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் 120 குழுக்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. 12 மாவட்டங்களில் இந்த குழுக்கள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் புத்திக்க சம்பத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட ... Read More