Tag: news

முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் – சந்தேநபர்களுக்கு விளக்கமறியல்

admin- August 20, 2025

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று  இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் ... Read More

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள்

admin- August 20, 2025

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு சுய போக்குவரத்தை ... Read More

துசித ஹல்லோலுவவுக்கு விளக்கமறியல்

admin- August 19, 2025

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 28 ஆம் ... Read More

உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி

admin- August 19, 2025

விவசாயிகளுக்கான உரமானியத்திற்கு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கம் விவசாயிகளுக்கு உரமானியத்தை வழங்கும் போது அந்தந்த விவசாயிகளுக்கு மானியத்தை சரியான நேரத்தில் கிடைப்பதையும், குறித்த நிதியுதவியை தமது விவசாய நடவடிக்கைகளுக்கான உரத்தேவைக்காக ... Read More

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் சபாநாயகரின் விசேட அறிவிப்பு

admin- August 19, 2025

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் இன்று செவ்வாயக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணையின் உண்மைகளை ஆராய்ந்து, ... Read More

வர்த்தகத்தை மீட்டெடுக்குமாறு வலியுறுத்தி ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்

admin- August 19, 2025

இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியதால் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் ... Read More

நானுஓயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம்

admin- August 19, 2025

நானுஓயா பெரகும்புர வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (19) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரகும்புர பகுதியில் இருந்து நானுஓயா நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து ... Read More

கொட்டாஞ்சேனை மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் – விசாரணையில் முன்னேற்றம்?

admin- August 18, 2025

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படும், மாணவி துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன. கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று இந்த விடயம் அறியப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வழக்கு, ... Read More

கொரியத் தூதுவர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் இடையே சந்திப்பு

admin- August 18, 2025

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கும் இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீ ( Miyon LEE) க்கும் இடையேயான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்றது. கொரியாவின் புதிய ... Read More

கட்டுநாயக்க விமான நிலையம் வருபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

admin- August 18, 2025

கட்டுநாயக்க - பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வருபவர்கள் பிரவேசிப்பதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இரவு 10 மணிமுதல் நள்ளிரவு வரையான ... Read More

சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.5 மில்லியனை கடந்தது

admin- August 18, 2025

2025 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.5 மில்லியனை கடந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் ... Read More

கடுவெல பகுதியில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை

admin- August 18, 2025

கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து இன்று கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மூன்று ரீ-56 துப்பாக்கிகள்,05 பிரவுனிங் பிஸ்டல்கள் மற்றும் ஒரு மெகசின் ஆகியன பொலிஸாரால் ... Read More