<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இலங்கை Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/இலங்கை/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 08 Jun 2026 07:22:10 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>இலங்கை Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/இலங்கை/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஆயுத சூப்பர் மார்க்கெட்டும் முள்ளிவாய்க்கால் பேரழிவும்  கொலம்பகேயின் வாக்குமூலத்தால் அம்பலமாகும் சீன முகம்</title>
		<link>https://oruvan.com/mullivaikkal-disaster-former-navy-chief-exposes-chinas-weapons-supermarket-conspiracy/</link>
					<comments>https://oruvan.com/mullivaikkal-disaster-former-navy-chief-exposes-chinas-weapons-supermarket-conspiracy/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Jun 2026 07:18:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA["Take Weapons Now]]></category>
		<category><![CDATA[Pay Later" – Admiral Colombage Strips China’s Deadly Mask in Eelam Tamil Genocide]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[போர்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால்]]></category>
		<category><![CDATA[வடக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49501</guid>

					<description><![CDATA[<p>ஈழத்தமிழினத்தின் வரலாற்றைச் சோகமயமாக மாற்றிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னணியில், சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ஒரு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயற்பட்டது என்பதை இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் அண்மைய உரை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டு, ஈழத்தமிழினத்தின் வரலாறே குருதியால் எழுதப்பட்டதன் பின்னணியில், உலக வல்லரசுகளின் புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டம் இருந்தது என்பது உலகறிந்த உண்மை. ஆயினும், தமிழினப் படுகொலைக்குச் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mullivaikkal-disaster-former-navy-chief-exposes-chinas-weapons-supermarket-conspiracy/">ஆயுத சூப்பர் மார்க்கெட்டும் முள்ளிவாய்க்கால் பேரழிவும்  கொலம்பகேயின் வாக்குமூலத்தால் அம்பலமாகும் சீன முகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஈழத்தமிழினத்தின் வரலாற்றைச் சோகமயமாக மாற்றிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னணியில், சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ஒரு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ போலச் செயற்பட்டது என்பதை இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் அண்மைய உரை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.</p>
<p>முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டு, ஈழத்தமிழினத்தின் வரலாறே குருதியால் எழுதப்பட்டதன் பின்னணியில், உலக வல்லரசுகளின் புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டம் இருந்தது என்பது உலகறிந்த உண்மை. ஆயினும், தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச விதிகளைப் புறந்தள்ளி சீனா எவ்வாறு ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’டைத் திறந்து பின்னணியில் நின்றது என்பதை, இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரியாகவும் கடற்படையின் தளபதியாகவும் இருந்த அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தற்போது பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.</p>
<p>கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேசக் கல்வி மையத்தில் அண்மையில் அவர் ஆற்றிய உரை, தமிழ் மக்களின் நெஞ்சில் உள்ள ஆறாத வடுக்களை மீண்டும் கிளறியுள்ளதுடன், சீனாவின் உண்மையான கொடூர முகத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.</p>
<p>இந்த வெற்றிக் களிப்புரை, சிங்களத் தேசத்தின் வீரத்தினால் போர் வெல்லப்படவில்லை, மாறாகச் சீனாவின் மூலோபாய வர்த்தக வெறியினாலும் அதன் நிபந்தனையற்ற இராணுவ ஆதரவினாலும்தான் ஈழ நிலம் பேரழிவிற்குள் தள்ளப்பட்டது என்ற கசப்பான உண்மையை உரத்துச் சொல்கிறது.</p>
<p><strong>‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ சதித் திட்டம்</strong></p>
<p>2006–2009 வரையான காலப்பகுதியில், தமிழ் மக்கள் பாதுகாப்பு வளையங்களுக்குள் முடக்கப்பட்டிருந்த வேளையில், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகள் ‘பேரழிவு ஆயுதங்களை’ வழங்க மறுத்துத் தடைகளை விதித்திருந்தன. &#8220;பேரழிவு ஆயுதங்கள் இல்லாமல் எவ்வாறு ஒரு போரை எதிர்கொண்டு எதிரிகளை அழிக்க முடியும்?&#8221; என்று கொலம்பகே தனது உரையில் கேலியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
<p>இலங்கை இராணுவம் திணறிய அந்த இக்கட்டான தருணத்தில்தான், சீனா கொழும்பு மற்றும் காலித் துறைமுகங்களுக்குள் தனது சொந்தப் பாதுகாப்புக் கிடங்குகளை அமைத்து ஆயுத விநியோகத்தை முன்னெடுத்தது.</p>
<p>&#8220;இது ஒரு ஷொப்பிங் பட்டியலை எடுத்துக் கொண்டு ஆயுத சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்வது போன்றதாகும். நீங்கள் அங்கு சென்று உங்களுக்குத் தேவையான ஆயுதங்களைச் சேகரித்து உடனடியாகப் போர்க்களத்தில் பயன்படுத்தலாம்&#8221; என்ற கொலம்பகேயின் வாக்குமூலம் அதிர்ச்சியளிக்கக்கூடியது.</p>
<p>முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் உடல்கள் சிதறிக்கொண்டிருந்தபோது, கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் ஆயுதக் கிடங்குகளின் கதவுகள் அகலத் திறந்திருந்தன. தமிழ் மக்களின் மரணங்களை சீனா தனது புவிசார் அரசியல் சதுரங்கத்தின் இலாபக் கணக்காகவே பார்த்தது என்பதை இந்த வாக்குமூலம் அப்பட்டமாக நிரூபித்துள்ளது.</p>
<p><strong>அபிவிருத்தி என்ற மாயையும் திட்டமிட்ட உள்நுழைவும்</strong></p>
<p>போர் முடிவடைந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஒரு நெடுஞ்சாலை கூட இருக்கவில்லை என்பதை கொலம்பகே தனது உரையில் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியுள்ளார். போரினால் உலுக்கப்பட்டிருந்த இலங்கை, சர்வதேச சமூகத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற முடியாமல் ஒரு வெறிச்சோடிய நிலையை எதிர்கொண்டது. இந்த உள்நாட்டுப் பலவீனத்தையே சீனா தனக்கான நுழைவாயிலாக மாற்றிக்கொண்டது.</p>
<p>இரண்டாயிரத்துப் பதினொன்று முதல் இரண்டாயிரத்துப் பதிமூன்று வரையான மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு &#8211; கட்டுநாயக்க நெடுஞ்சாலை, மத்தள விமான நிலையம் போன்ற பிரமாண்டமான திட்டங்களை சீனா முடுக்கிவிட்டது. இது ஏதோ இலங்கையின் மீதான அன்பினால் செய்யப்பட்ட முதலீடல்ல, மாறாகத் தென்னிலங்கையைத் தனது வர்த்தகக் கடன் பொறிக்குள் நிரந்தரமாகப் பூட்டி வைப்பதற்காகச் சீனா விரித்த மிக நுட்பமான பொருளாதார வலை என்பதை கொலம்பகேயின் உரை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.</p>
<p><strong>‘பணம் பிறகு, பிணங்கள் இப்போது’</strong></p>
<p>&#8220;ஆயுதங்களை எடுத்துச் சென்று உடனடியாகப் பயன்படுத்துங்கள், பணத்தைப் பிறகு தாருங்கள்&#8221; என்று கொலம்பகே குறிப்பிடும் சீனாவின் இந்தச் சலுகை, இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட வெறும் இராணுவக் கடன் அல்ல.</p>
<p>‘பொருட்களைப் பெற்றுக்கொண்டு பிறகு பணம் செலுத்துங்கள்’ என்ற சீனாவின் ஏற்பாடு, இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட சலுகை அல்ல, அது தமிழ் இனத்தை முற்றாக அழிப்பதற்காக எழுதப்பட்ட மரண சாசனமாகும். தமிழ் மக்களைக் கொன்று குவிக்கச் சீனா செய்த இந்த ஆயுத முதலீடு, போருக்குப் பிந்தைய காலத்தில் பேரினவாத அரசாங்கத்தை முற்றாகத் தன்வசப்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாய நகர்வாகும்.</p>
<p>போர் முடிந்த மறுகணமே, இந்த ஆயுத விநியோக நிறுவனங்கள் ஒரே இரவில் ‘கட்டுமான நிறுவனங்களாக’ அவதாரமெடுத்தன. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொன்றழிக்கப்பட்டுக் கிடந்தபோது, அந்தப் பிணங்களின் மீதுதான் சீனாவின் கொழும்புத் துறைமுக நகரமும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளும் நுரைச்சோலை மின்நிலையமும் கட்டப்பட்டுள்ளன என்பதையும் கொலம்பகே தனது உரையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.</p>
<p>இன்று இலங்கையில் பளபளக்கும் அதிவேக நெடுஞ்சாலைகளின் அடித்தளங்கள், தமிழ் மக்களின் குருதியினாலும் முள்ளிவாய்க்கால் சாம்பலினாலும் மெழுகப்பட்டவை என்பதைச் சிங்களத் தேசமும், சீனப் பேரரசும் மறைக்கத் துடித்தாலும், அவர்களின் சொந்த அதிகாரிகளின் வாக்குமூலங்களே அதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.</p>
<p><strong>வடக்கு &#8211; கிழக்கைக் குறிவைக்கும் சீனாவின் ‘மென் அதிகார’ வியூகம்</strong></p>
<p>தென்னிலங்கையைத் தனது கடன் பொறிக்குள் சிக்க வைத்து, அம்பாந்தோட்டை துறைமுகம் உட்படப் பல மூலோபாயப் பகுதிகளைத் தன்வசப்படுத்திய சீனாவுக்கு, கடந்த பல வருடங்களாக வடக்கு &#8211; கிழக்கு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. ஈழத்தமிழர்களின் தாயக நிலத்தின் மீது நேரடியாகக் கால்வைக்க முடியாமல் சீனா இப்போதும் தவித்துக் கொண்டிருக்கின்றது.</p>
<p>இதற்குக் காரணம், தமிழ் மக்களின் உறுதியான ஒரே நோக்க அரசியல் கோட்பாடும், தாயகக் கோட்பாடும் ஆகும். தமிழ் மக்களின் இந்த அரசியல் இருப்பை உடைத்துத் தவிடுபொடியாக்கும் சீனாவின் அத்தனை முயற்சிகளுக்கும், வெளிப்புறச் சக்தியான இந்தியாவின் பிராந்தியப் பாதுகாப்பு நலன்களும், தலையீடுகளும் பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.</p>
<p>அத்துடன், தமிழர் பகுதி அரசியல் தலைமைகளின் இறுக்கமான பிடியும், சீனாவின் நேரடி ஊடுருவலுக்குப் பாரிய தடையாக இருந்து வருகின்றது. இருப்பினும், சீனா தனது காய்நகர்த்தல்களைக் கைவிட்டதாக இல்லை. நேரடியாக வடக்கு &#8211; கிழக்கிற்குள் நுழைய முடியாத சூழ்ச்சி ஆட்டத்தை அது இப்போது மிக நிதானமாகவும் தந்திரமாகவும் அரங்கேற்றத் தொடங்கியுள்ளது.</p>
<p><strong>வாழ்வாதார முகமூடியும் தமிழ் மக்களின் விழிப்புணர்வும்</strong></p>
<p>நேரடி இராணுவ அல்லது பொருளாதாரத் திட்டங்கள் மூலம் நுழைய முற்பட்டால் இந்தியாவின் எதிர்ப்பையும் தமிழ் மக்களின் கொந்தளிப்பையும் சந்திக்க நேரிடும் என்பதைச் சீனா நன்கு அறிந்துள்ளது. இதனால், ‘மென் அதிகார’ (Soft Power) அரசியலைச் சீனா கையில் எடுத்துள்ளது.</p>
<p>வடக்கு &#8211; கிழக்கின் கடற்றொழிலாளர் அமைப்புகள், உள்ளூர் முக்கியப் புள்ளிகள், சில அடிவருடி அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளைக் கைக்குள் போட்டுகொண்டு படிப்படியாக, மெதுவாக உள்நுழையும் சதித்திட்டங்களை சீனா நகர்த்திக் கொண்டிருக்கின்றது. வறுமையை முதலாக்கி, வாழ்வாதார உதவிகள் என்ற போர்வையிலும், கடலட்டைப் பண்ணைகள், உலர் உணவு விநியோகம் என்ற முகமூடியணிந்தும் தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.</p>
<p>இன்றுவரை சர்வதேச அரங்கில் தமிழ் மக்களுக்கான ஐநா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட தளங்களில் நீதி மறுக்கப்படுவதற்குப் பின்னணியில், இந்த ‘ஆயுத சூப்பர் மார்க்கெட்’ நடத்திய சீனாவின் வீட்டோ அதிகாரக் கரங்களே முதன்மையாக இருக்கின்றன என்பதைத் தமிழ் சமூகம் மறந்துவிடக்கூடாது. ஜெனிவாவில் தமிழர்களுக்கு எதிராகப் பகிரங்கமாக நின்றுகொண்டு, யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் வந்து உதவிப் பொருட்கள் வழங்குவது தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்வை மழுங்கடிக்கும் சதியன்றி வேறில்லை.</p>
<p><strong>நிலப்பறிப்பின் நீண்டகாலப் பேராபத்து</strong></p>
<p>கடலட்டைப் பண்ணைகள், முதலீடுகள் என்ற போர்வையில் வடக்கு &#8211; கிழக்கின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்புகளையோ அல்லது கடல் வளங்களையோ ஏதேனுமோர் அடிப்படையில் சீனாவுக்குத் தாரை வார்ப்பது, தமிழ் இனத்தின் எதிர்காலத்திற்குப் பாரிய, நீண்டகாலப் பேராபத்தாய் முடியும்.</p>
<p>தென்னிலங்கையைப் போல நமது தாயக நிலத்தையும் சீனா தனது ஆதிக்கப் பிடிக்குள் கொண்டு வந்தால், தமிழ் மக்களின் சுயாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் கோரிக்கைகள் சர்வதேச அரங்கில் முற்றாக நீர்த்துப் போகச் செய்யப்படும். அதுமட்டுமன்றி, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிராந்தியப் போர்க்களமாக நமது பூர்வீக நிலம் மாறும் அபாயமும் உண்டு. நிலம் என்பது வெறும் பொருளல்ல, அது தமிழர்களின் இறையாண்மை மற்றும் வரலாற்றுத் தொடர்ச்சியின் அடையாளம் என்பதை உணர்ந்து, அதனைப் பாதுகாப்பது நமது முதன்மைக் கடமையாகும்.</p>
<p>அட்மிரல் கொலம்பகேயின் இந்த வாக்குமூலம் தமிழ் மக்களுக்கு உணர்த்தும் பாடம் என்னவெனில், புவிசார் சர்வதேச அரசியலில் எந்த நாடும் நமக்கு நிரந்தர நண்பனும் அல்ல, பகையாளியும் அல்ல. சீனாவுக்குத் தேவைப்பட்டது தமிழர்களின் தாயக நிலத்தின் மூலோபாய முக்கியத்துவமே தவிர, இங்கு வாழும் தமிழ் மக்களின் உரிமைகளோ, அவர்களின் உயிர்களோ அல்ல. தமது உறவுகளின் எலும்புகளின் மேல் கட்டப்பட்ட சீனக் கட்டுமானங்களையும், அவர்களின் தந்திரோபாய உதவிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டிய வரலாற்றுத் தருணம் இதுவாகும்.</p>
<p>உள்நாட்டுக் கைக்கூலிகளைப் பயன்படுத்திச் சீனா நடத்தும் இந்த மெதுவான ஊடுருவல் குறித்துத் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளும், சமூக ஆர்வலர்களும் விழிப்படைய வேண்டும். நமது தாயக நிலத்தை மற்றொரு வல்லரசின் சூறையாடலுக்குத் தாரைவார்ப்பது, முள்ளிவாய்க்காலில் மடிந்த ஆன்மாக்களுக்குச் செய்யும் துரோகம்.</p>
<p>சீனா விரிக்கும் சதிவலையைத் தவிடுபொடியாக்கி, நமது அரசியல் அபிலாஷைகளை உறுதியுடன் காப்பதே ஈழத்தமிழினத்தின் இன்றைய அவசரத் தேவையாகும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/mullivaikkal-disaster-former-navy-chief-exposes-chinas-weapons-supermarket-conspiracy/">ஆயுத சூப்பர் மார்க்கெட்டும் முள்ளிவாய்க்கால் பேரழிவும்  கொலம்பகேயின் வாக்குமூலத்தால் அம்பலமாகும் சீன முகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://oruvan.com/mullivaikkal-disaster-former-navy-chief-exposes-chinas-weapons-supermarket-conspiracy/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை</title>
		<link>https://oruvan.com/global-war-threats-and-political-inaction-is-sri-lanka-forgetting-the-lessons-of-2022/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 07:04:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரிசி]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[யூரியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49463</guid>

					<description><![CDATA[<p>&#8211; Dharmaraja Rasmila ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் பிராந்தியப் போர்ச் சூழல், உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தி வரும் தாக்கம் மிகப் பயங்கரமானது. உலகளாவிய இந்த நெருக்கடி ஒருபுறமிருக்க, இலங்கையின் தற்போதைய நிலையைச் சரியாகப் புரிந்துகொள்ள நாம் 2022 ஆம் ஆண்டின் கசப்பான யதார்த்தங்களை மீண்டும் உற்றுநோக்க வேண்டியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றபோது 110 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு, அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/global-war-threats-and-political-inaction-is-sri-lanka-forgetting-the-lessons-of-2022/">தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8211; Dharmaraja Rasmila</p>
<p>ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் பிராந்தியப் போர்ச் சூழல், உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தி வரும் தாக்கம் மிகப் பயங்கரமானது.</p>
<p>உலகளாவிய இந்த நெருக்கடி ஒருபுறமிருக்க, இலங்கையின் தற்போதைய நிலையைச் சரியாகப் புரிந்துகொள்ள நாம் 2022 ஆம் ஆண்டின் கசப்பான யதார்த்தங்களை மீண்டும் உற்றுநோக்க வேண்டியுள்ளது.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றபோது 110 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு, அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது 370 ரூபாவைக் கடந்து சென்றமை நம் அனைவருக்கும் நினைவிருக்கும். ஆனால், 2022 ஆம் ஆண்டில் இன்றைய நாளைப்போல உலகப் போர்களோ அல்லது சர்வதேசச் சந்தையில் பாரிய எரிபொருள் விலை அதிகரிப்போ இருந்திருக்கவில்லை. கொவிட் பெருந்தொற்றுப் பரவியது உண்மைதான் என்றாலும், அதனை உலகின் ஏனைய நாடுகள் அழுத்தங்களுக்கு மத்தியிலும் மிக அற்புதமாக மேலாண்மை செய்திருந்தன என்றே சொல்லவேண்டும்.</p>
<p>இந்த நிலையில், ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்ததை நாம் ஒப்புக்கொண்டேயாகவேண்டும். இருப்பினும், 2022 இல் ஏற்பட்ட அந்தப் பொருளாதார நெருக்கடிக் காலத்தில் ஒரு கிலோ பருப்பு 700 ரூபாவுக்கும் ஒரு கிலோ சீனி 500 ரூபாவுக்கும் விற்கப்பட்டதுடன், அவை தலா ஒன்று அல்லது இரண்டு கிலோ என்ற கட்டுப்பாடுகளுடனேயே மிகக் கடினமாகப் பெறப்பட்டன. உள்நாட்டு வெங்காயத்தில் இருந்து ஒரு கட்டுக் கீரை வரை அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அனைத்தும் உச்சத்தைத் தொட்டன.</p>
<p>அத்துடன், வரலாறு காணாத வகையில் நான்கு வருடங்களுக்கும் மேலாக வாகன இறக்குமதி முற்றிலும் தடைப்பட்டிருந்தது.</p>
<p>இலங்கை வரலாற்றின் மிக மோசமான 70 சதவீதப் பணவீக்கம் அப்போதுதான் பதிவாகியது. இதற்கெல்லாம் சர்வதேசக் காரணிகள் எதுவும் இருக்கவில்லை. மாறாக, ஆட்சியாளர்களின் தவறான நிதி நிர்வாகமும் நிதி ஒழுக்கமின்மையுமே பிரதான காரணங்களாகும்.</p>
<p>திறந்த பொருளாதாரக் கொள்கைக்குள் நுழைந்து 48 ஆண்டுகள் கடந்த பின்னரும், இலங்கை இன்றுவரை வெறும் 6 முதல் 7 பில்லியன் டொலர் வரையிலான ஓர் ஏழ்மையான, சொற்பமான வெளிநாட்டுக் கையிருப்பைக் கொண்ட நாடாகவே நீடிக்கிறது.</p>
<p>அதிலும் கணிசமான பகுதி சீனாவினால் வழங்கப்பட்ட &#8216;சுவாப்&#8217; (Swap) நிதியுதவியாகும். இதற்கு நேர்மாறாக, சீனாவிடம் 3 முதல் 4 ட்ரில்லியன் டொலர்களும், வியட்நாமிடம் 87 முதல் 90 பில்லியன் டொலர்களும் வெளிநாட்டுக் கையிருப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>தற்போதைய உலகப் போர்ச் சூழலால் சர்வதேசச் சந்தையில் விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளன.</p>
<p>யூரியா 151 சதவீதத்தாலும், டீசல் 148 சதவீதத்தாலும், பெட்ரோல் 136 சதவீதத்தாலும், உரம் 135 சதவீதத்தாலும், நிலக்கரி 112 சதவீதத்தாலும், அரிசி 107 சதவீதத்தாலும் விலை அதிகரிப்பைக் கண்டுள்ளன.</p>
<p>குறிப்பாக, உலகளாவிய உர வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈரான், கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகள் சூழ்ந்துள்ள &#8216;ஹோர்முஸ் நீரிணை&#8217; வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.</p>
<p>தற்போது இப்பாதையில் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளால், உரத் தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவு மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.</p>
<p>போருக்கு முன்னர் 150 டொலராக இருந்த ஒரு தொன் சல்பூரிக் அமிலத்தின் விலை, தற்போது 1,000 டொலரை நெருங்கியுள்ளது.</p>
<p>உலகமே இத்தகைய பாரிய பொருளாதாரப் பேரழிவை எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான தருணத்தில், தியவன்ன நாடாளுமன்றத்தில் ஆட்சி பீடத்தில் உள்ள ஆளுங்கட்சியினர் சிலர் இன்னும் அலங்காரப் பொம்மைகளைப் போல எவ்விதப் பொறுப்பும் இன்றி நாடாளுமன்றில் கதிரைகளைச் சூடாக்கிவருகின்றனர்.</p>
<p>மறுபுறம் எதிர்க்கட்சியினரோ, &#8216;இன்று ஆட்சியைத் தாருங்கள், நாம் உடனே விலைவாசியைக் குறைப்போம்&#8217; என்று எவ்விதத் தெளிவான பொருளாதாரத் திட்டமும் இன்றி ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.</p>
<p>எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தியவன்ன ஏரியில் இருக்கும் தவளைகளைப் போலப் பயனில்லாமல் சத்தமிடுவதைத் தவிர்த்து, உலக நிலைவரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிராந்தியப் போர் முடியும் வரையிலாவது உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது பற்றி ஆராய்ந்து, பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வுகளைத்தேட ஒன்றிணைய வேண்டும், என்பதே இன்றைய காலத்தின் அவசியமான தேவையாகும்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/global-war-threats-and-political-inaction-is-sri-lanka-forgetting-the-lessons-of-2022/">தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நெருப்பு வளையத்திற்குள் தகிக்கும் பூமி ; WMO எச்சரிக்கும் இரட்டைப் பேராபத்து தென்னாசியாவுக்குக் காத்திருக்கும் சவால்</title>
		<link>https://oruvan.com/devastating-drought-and-power-crisis-loom-over-south-asia-amid-extreme-ocean-warming/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 06:46:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[(El Niño]]></category>
		<category><![CDATA[(National Geographic]]></category>
		<category><![CDATA[Oceana]]></category>
		<category><![CDATA[எல் நினோ]]></category>
		<category><![CDATA[கோதுமை]]></category>
		<category><![CDATA[நெல்]]></category>
		<category><![CDATA[பேராபத்து]]></category>
		<category><![CDATA[மழைப்பொழிவு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49465</guid>

					<description><![CDATA[<p>தொழிநுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் மனித நாகரிகத்திற்கு, இயற்கை தனது மிக உக்கிரமான எச்சரிக்கையை விடுக்கத் தொடங்கியுள்ளது. புவிக்கோளத்தின் வளிமண்டல வெப்பமும், பெருங்கடல்களின் கொதிநிலையும் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ள சூழலில், உலக வானிலை அமைப்பு (WMO &#8211; World Meteorological Organization) வெளியிட்டுள்ள புதிய பருவகால அறிக்கை ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உலுக்கியுள்ளது. இந்த ஆண்டின் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தொடக்கத்தில் தற்காலிக அமைதி காப்பது போல் தெரிந்த பசிபிக் பெருங்கடல், தற்போது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/devastating-drought-and-power-crisis-loom-over-south-asia-amid-extreme-ocean-warming/">நெருப்பு வளையத்திற்குள் தகிக்கும் பூமி ; WMO எச்சரிக்கும் இரட்டைப் பேராபத்து தென்னாசியாவுக்குக் காத்திருக்கும் சவால்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தொழிநுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் மனித நாகரிகத்திற்கு, இயற்கை தனது மிக உக்கிரமான எச்சரிக்கையை விடுக்கத் தொடங்கியுள்ளது.</p>
<p>புவிக்கோளத்தின் வளிமண்டல வெப்பமும், பெருங்கடல்களின் கொதிநிலையும் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ள சூழலில், உலக வானிலை அமைப்பு (WMO &#8211; World Meteorological Organization) வெளியிட்டுள்ள புதிய பருவகால அறிக்கை ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உலுக்கியுள்ளது.</p>
<p>இந்த ஆண்டின் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தொடக்கத்தில் தற்காலிக அமைதி காப்பது போல் தெரிந்த பசிபிக் பெருங்கடல், தற்போது அசுர வேகத்தில் வெப்பமடைந்து வருவதாக செயற்கைக்கோள் தரவுகள் எச்சரிக்கின்றன.</p>
<p>இதன் விளைவாக, உலகமே அஞ்சிய &#8216;எல் நினோ&#8217; (El Niño) காலநிலை அதிகாரப்பூர்வமாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது. இது ஒரு தற்காலிக வானிலை மாற்றம் அல்ல &#8211; மாறாக உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலைக்கு விடுக்கப்பட்டுள்ள &#8216;போர்ப் பிரகடனம்&#8217; என்றே காலநிலை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.</p>
<p>ஆய்வாளர்களின் புதிய தரவுகளின்படி, மனித நடவடிக்கைகளால் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள புவி வெப்பமயமாதல், பசிபிக் பெருங்கடலின் இந்த அசாதாரண வெப்ப அலையை மேலும் உந்தித்தள்ளி, வரலாற்றிலேயே மிகக் கொடூரமானதொரு &#8216;சூப்பர் எல் நினோ&#8217; (Super El Niño) பேராபத்தாக உருவெடுக்கும் என்ற அச்சத்தை உலகளாவிய காலநிலை விஞ்ஞானிகள் மத்தியில் வலுப்படுத்தியுள்ளது.</p>
<p><strong>அறிவியலின் இறுதி எச்சரிக்கை</strong></p>
<p>உலகளாவிய கணினி மாதிரிகளின் முன்கணிப்பின்படி, பசிபிக் பெருங்கடலின் &#8216;நினோ 3.4&#8217; (மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதி) பிராந்தியத்தின் வெப்பநிலை இயல்பை விட 1.5°C வரை அதிகரிக்கும் என 100 வீதம் உறுதியாகக் கணிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வழக்கமாக வசந்த காலத்தில் நிலவும் காலநிலை முன்கணிப்புச் சவால்களையும் தாண்டி, அனைத்து அறிவியல் மாதிரிகளும் இவ்வளவு ஒத்த கருத்துடன் எச்சரிப்பது உலக வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.</p>
<p>இந்த எல் நினோ தீவிரமடைதலானது, இதே காலகட்டத்தில் இந்தியப் பெருங்கடலில் உருவாகும் &#8216;நேர்மறை இந்தியப் பெருங்கடல் இருமுனை&#8217; (Positive IOD) மாற்றத்துடன் கைகோர்க்கவுள்ளது.</p>
<p>இந்த இரு பேராபத்துகளின் கூட்டுச் சேர்க்கை காரணமாக, உலகெங்கிலும் உள்ள நிலப்பரப்புகளில் 70% முதல் 80% வரை கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும்.</p>
<p>இதன் விளைவாக, உலக வரைபடம் இரு தீவிர எல்லைகளைச் சந்திக்கவுள்ளது. ஒருபுறம் அமேசான் காடுகளும், அவுஸ்ரேலியாவும், தென்கிழக்கு ஆசியாவும் வறட்சியின் பிடியில் கருகவுள்ள நிலையில், மறுபுறம் மத்திய பசிபிக் பகுதிகள் முன்னெப்போதும் இல்லாத பெருவெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p>
<p><strong>வரலாற்றை மிஞ்சும் விபரீதம்</strong></p>
<p>கடந்த காலங்களில் 1982-1983 மற்றும் 1997-1998 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட &#8216;சூப்பர் எல் நினோ&#8217; உலகப் பொருளாதாரத்திற்கு மரண அடியைக் கொடுத்ததுடன், பில்லியன் கணக்கான டொலர்கள் இழப்பையும் ஏற்படுத்தியது.</p>
<p>மிக அண்மையில் 2015-2016 இல் ஏற்பட்ட தாக்கத்தால் உலகளவில் கடுமையான உணவுப் பற்றாக்குறையும் கொடிய சூறாவளிகளும் தோன்றின. தற்போதைய பொருளாதாரப் பகுப்பாய்வுகளின்படி, இம்முறை உருவாகும் எல் நினோ தாக்கத்தால் உலகளாவிய வர்த்தகம், விநியோகச் சங்கிலி மற்றும் எரிசக்திச் சந்தை ஆகியவை முன்னெப்போதும் இல்லாத அளவு பாரிய நிதி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும், என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சூழலியல் பாதுகாப்பு அமைப்பான &#8216;ஒசியானா&#8217; (Oceana) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதனால் &#8216;கடலின் நுரையீரல்&#8217; என்று அழைக்கப்படும் பவளப்பாறைகள் வெளிறி அழியும் (Coral Bleaching) பேராபத்து இந்த ஆண்டின் பிற்பகுதியில் மிகத் தீவிரமடையவுள்ளது.</p>
<p>கடல்சார் பல்லுயிர் பெருக்கம் மற்றும் மீன்பிடித் தொழிற்துறைக்கு இது மீளமுடியாத பேரிடியாக அமையும்.</p>
<p>அத்துடன், பூமியின் மாபெரும் காபன் உறிஞ்சிகளான காடுகள் கருகி, கட்டுக்கடங்காத காட்டுத்தீயை உருவாக்குவதன் மூலம் வளிமண்டல காபன் உமிழ்வு பல மடங்கு அதிகரிக்கும்.</p>
<p><strong>தென்னாசியாவின் நிலை என்ன?</strong></p>
<p>உலக வானிலை அமைப்பின் கணிப்பின்படி, இந்த இரட்டைத் தாக்கத்தின் மிகப்பெரிய பாதிப்பை இந்தியத் துணைக்கண்டமும் இலங்கையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.</p>
<p>நஷனல் ஜியோகிராபிக் (National Geographic) இதழின் ஆய்வுக் கட்டுரையின்படி, இந்த எல் நினோ சுழற்சியானது தென்னாசியப் பிராந்தியத்தின் உயிர்நாடியான தென்மேற்குப் பருவமழைப் பொழிவை முற்றாகச் சீர்குலைத்து, மிக மோசமான வறட்சிக்கு வழிவகுக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>இலங்கையின் உள்ளூர் காலநிலை மற்றும் பொருளாதாரத் தரவுகளின்படி, மழைப்பொழிவுக் குறைவால் நெல், கோதுமை மற்றும் இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பயிரான தேயிலை ஆகியவற்றின் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கடுமையான உணவுப் பணவீக்கமும், வாழ்வாதாரப் பாதிப்பும் தலைதூக்கும்.</p>
<p>இலங்கையைப் பொறுத்தமட்டில் நீர்மின் உற்பத்தியை பெருமளவில் நம்பியிருக்கும் நாடு என்ற ரீதியில், பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்து கடுமையான மின்சார நெருக்கடியும் ஏற்பட வாய்ப்புள்ளது. குடிநீர் ஆதாரங்கள் வற்றிப்போதால், மனித &#8211; யானை மோதல்கள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.</p>
<p>இது வெறும் வானிலை அறிக்கை அல்ல. நாடுகள் தங்களின் தழுவல் கொள்கைகளையும் நீர் மேலாண்மைத் திட்டங்களையும் போர்க்கால அடிப்படையில் மாற்றியமைக்க வேண்டும் என்பதற்கான இறுதி எச்சரிக்கை!</p>
<p>இயற்கையின் இந்த உக்கிரத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒன்றிணைந்து காபன் உமிழ்வைக் குறைப்பதும், உள்நாட்டு அளவில் நீர் மற்றும் உணவு ஆதாரங்களைப் பாதுகாப்பதும் மட்டுமே வரவிருக்கும் பேராபத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரே கேடயமாகும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/devastating-drought-and-power-crisis-loom-over-south-asia-amid-extreme-ocean-warming/">நெருப்பு வளையத்திற்குள் தகிக்கும் பூமி ; WMO எச்சரிக்கும் இரட்டைப் பேராபத்து தென்னாசியாவுக்குக் காத்திருக்கும் சவால்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்க மண்டலம் &#8211; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/low-pressure-area-surrounding-sri-lanka-meteorological-department-announcement/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 14 May 2026 13:13:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49388</guid>

					<description><![CDATA[<p>இலங்கையைச் சூழவுள்ள பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள இந்தத் தாழ் அமுக்க மண்டலம் இன்னும் அதே பகுதியில் நீடிப்பதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், இது அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் (14) மேற்கொள்ளப்பட்ட வானிலை பகுப்பாய்வுகளின்படி, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/low-pressure-area-surrounding-sri-lanka-meteorological-department-announcement/">இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்க மண்டலம் &#8211; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையைச் சூழவுள்ள பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p>
<p>இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள இந்தத் தாழ் அமுக்க மண்டலம் இன்னும் அதே பகுதியில் நீடிப்பதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், இது அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>இன்றைய தினம் (14) மேற்கொள்ளப்பட்ட வானிலை பகுப்பாய்வுகளின்படி, நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பரப்புகளிலும், வங்காள விரிகுடாவின் ஆழமான கடல் பரப்புகளிலும் பலத்த காற்றுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வானிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் காரணமாக பொதுமக்கள், குறிப்பாகக் கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/low-pressure-area-surrounding-sri-lanka-meteorological-department-announcement/">இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்க மண்டலம் &#8211; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொழும்பில் இன்று பலத்த பாதுகாப்பு: இந்தியத் துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள்</title>
		<link>https://oruvan.com/indian-vp-to-arrive-in-sri-lanka-today-special-traffic-plan-announced/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Apr 2026 03:49:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன்]]></category>
		<category><![CDATA[பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48560</guid>

					<description><![CDATA[<p>இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கை வருகின்றார். தனது பயணத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் அவர் ஈடுபடவுள்ளார். இந்த விஜயத்தின் முக்கிய அங்கமாக, &#8216;டித்வா&#8217; சூறாவளி புனர்வாழ்வு பணிகள் மற்றும் பல்வேறு அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளன. மேலும், அவர் அரசியல் மற்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-vp-to-arrive-in-sri-lanka-today-special-traffic-plan-announced/">கொழும்பில் இன்று பலத்த பாதுகாப்பு: இந்தியத் துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கை வருகின்றார்.</p>
<p>தனது பயணத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் அவர் ஈடுபடவுள்ளார்.</p>
<p>இந்த விஜயத்தின் முக்கிய அங்கமாக, &#8216;டித்வா&#8217; சூறாவளி புனர்வாழ்வு பணிகள் மற்றும் பல்வேறு அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளன.</p>
<p>மேலும், அவர் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>துணை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் இன்று பலத்த பாதுகாப்பு மற்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p>
<p>கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவர் தங்கியிருக்கும் தாஜ் சமுத்ரா ஹோட்டல் வரையிலும், அங்கிருந்து ஜனாதிபதி செயலகம் செல்லும் பாதைகளிலும் போக்குவரத்து இன்று மட்டுப்படுத்தப்படவுள்ளது.</p>
<p>நாளை மறுதினம் வரை இந்த விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-vp-to-arrive-in-sri-lanka-today-special-traffic-plan-announced/">கொழும்பில் இன்று பலத்த பாதுகாப்பு: இந்தியத் துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மின்சாரக் கட்டணத்தில் புதிய மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை மாத்திரமே திருத்தம்</title>
		<link>https://oruvan.com/new-formula-electricity-tariffs-to-change-only-once-a-year/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Apr 2026 03:35:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மின்சாரக்  கட்டணம்]]></category>
		<category><![CDATA[மின்சாரத் துறை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48557</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கும் முறைக்கு பதிலாக, ஆண்டுக்கு ஒருமுறை மாத்திரமே கட்டணத்தைத் திருத்தும் புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்த எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை எரிசக்தி மற்றும் நிதி அமைச்சுகள் தற்போது முன்னெடுத்து வருகின்றன. தற்போதைய நடைமுறையில் வறட்சி காலங்களில் கட்டணம் அதிகரிப்பதையும், மழைக்காலங்களில் குறைவதையும் நுகர்வோர் எதிர்கொள்கின்றனர். ஆனால் புதிய முறையின்படி, ஆண்டின் முதல் பகுதியில் ஏற்படும் வரட்சிக் கால [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/new-formula-electricity-tariffs-to-change-only-once-a-year/">மின்சாரக் கட்டணத்தில் புதிய மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை மாத்திரமே திருத்தம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கும் முறைக்கு பதிலாக, ஆண்டுக்கு ஒருமுறை மாத்திரமே கட்டணத்தைத் திருத்தும் புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்த எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.</p>
<p>இது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை எரிசக்தி மற்றும் நிதி அமைச்சுகள் தற்போது முன்னெடுத்து வருகின்றன.</p>
<p>தற்போதைய நடைமுறையில் வறட்சி காலங்களில் கட்டணம் அதிகரிப்பதையும், மழைக்காலங்களில் குறைவதையும் நுகர்வோர் எதிர்கொள்கின்றனர்.</p>
<p>ஆனால் புதிய முறையின்படி, ஆண்டின் முதல் பகுதியில் ஏற்படும் வரட்சிக் கால நட்டத்தை, ஆண்டின் இரண்டாம் பாதியில் கிடைக்கும் அதிக மழையினால் ஈடுகட்டும் வகையில் சீரான கட்டண நிர்ணயம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p>
<p>இந்த மாற்றத்தினால் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களது மின்சார செலவுகளை முன்கூட்டியே திட்டமிட முடிவதோடு, மின்சாரக் கட்டண மாற்றத்தினால் அடிக்கடி பொருட்களின் விலைகள் உயர்வதும் கட்டுப்படுத்தப்படும். சந்தையில் பொருட்களின் விலைகள் குறுகிய காலத்தில் பாரிய அளவில் ஏற்றத்தாழ்வு அடைவதை இது தவிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>இந்த புதிய கட்டணச் சூத்திரம் இறுதி செய்யப்பட்ட பின்னர், மின்சாரத் துறை ஒழுங்குமுறை அமைப்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது. அதன் பின்னரே இது நாடு முழுவதும் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/new-formula-electricity-tariffs-to-change-only-once-a-year/">மின்சாரக் கட்டணத்தில் புதிய மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை மாத்திரமே திருத்தம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எரிபொருள் கையிருப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை: மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் இன்று வருகை</title>
		<link>https://oruvan.com/first-crude-oil-tanker-since-middle-east-conflict-to-arrive-in-sri-lanka-today/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Apr 2026 06:57:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[மசகு எண்ணெய்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48472</guid>

					<description><![CDATA[<p>மத்திய கிழக்கிலிருந்து ஒன்பதாயிரத்து 750 மெற்றிக் டொன் மசகு எண்ணெயை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே, கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு நாட்டுக்கு வருகை தரும் முதலாவது மசகு எண்ணெய் கப்பல் இதுவெனக் குறிப்பிட்டார். தற்போதைய எரிபொருள் கையிருப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு எரிபொருள் தாங்கிக் கப்பல் இந்த மாத இறுதிக்குள் நாட்டை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/first-crude-oil-tanker-since-middle-east-conflict-to-arrive-in-sri-lanka-today/">எரிபொருள் கையிருப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை: மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் இன்று வருகை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மத்திய கிழக்கிலிருந்து ஒன்பதாயிரத்து 750 மெற்றிக் டொன் மசகு எண்ணெயை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.</p>
<p>இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே, கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு நாட்டுக்கு வருகை தரும் முதலாவது மசகு எண்ணெய் கப்பல் இதுவெனக் குறிப்பிட்டார்.</p>
<p>தற்போதைய எரிபொருள் கையிருப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு எரிபொருள் தாங்கிக் கப்பல் இந்த மாத இறுதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளது.</p>
<p>இதேவேளை, அடுத்த மாத இறுதியில் அமெரிக்காவிலிருந்து மசகு எண்ணெய் ஏந்திய மற்றுமொரு கப்பல் வருகை தரவுள்ளது.</p>
<p>அமெரிக்காவில் மசகு எண்ணெய் ஏற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதுடன், அங்கிருந்து இலங்கையை வந்தடைய சுமார் 45 நாட்கள் எடுக்கும் எனவும் முகாமைத்துவப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/first-crude-oil-tanker-since-middle-east-conflict-to-arrive-in-sri-lanka-today/">எரிபொருள் கையிருப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை: மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல் இன்று வருகை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>முதியவர்கள் தவறி விழுவதைத் தடுப்பது எப்படி? &#8211; ஓர் விழிப்புணர்வு</title>
		<link>https://oruvan.com/how-to-prevent-falls-in-the-elderly-an-awareness/</link>
		
		<dc:creator><![CDATA[Darwin Paramasivam]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Apr 2026 09:26:08 +0000</pubDate>
				<category><![CDATA[பொழுதுபோக்கு]]></category>
		<category><![CDATA[Elder Care]]></category>
		<category><![CDATA[Fall Prevention]]></category>
		<category><![CDATA[Health Tips Tamil]]></category>
		<category><![CDATA[Healthy Aging]]></category>
		<category><![CDATA[Home Safety]]></category>
		<category><![CDATA[Medical Advice]]></category>
		<category><![CDATA[Preventing Injuries]]></category>
		<category><![CDATA[Senior Citizens]]></category>
		<category><![CDATA[Seniors Safety]]></category>
		<category><![CDATA[ஆரோக்கியம்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உடற்பயிற்சி]]></category>
		<category><![CDATA[எலும்பு முறிவு பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[தமிழ்]]></category>
		<category><![CDATA[மருத்துவ ஆலோசனை]]></category>
		<category><![CDATA[முதியவர் பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[முதியோர் பராமரிப்பு]]></category>
		<category><![CDATA[விபத்து தடுப்பு]]></category>
		<category><![CDATA[விழுவதைத் தடுத்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48401</guid>

					<description><![CDATA[<p>பொதுவாக எவர் வேண்டுமானாலும் தவறி விழுந்து காயமடையலாம். ஆனால், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இது மிக ஆபத்தான ஒன்றாக அமைகிறது. வயது முதிர்வினால் உடலில் ஏற்படும் தசை வலிமை குறைவு, சமநிலையைப் பேணுவதில் உள்ள சிரமம் மற்றும் கண்பார்வை அல்லது காது கேளாமை போன்ற குறைபாடுகளால் முதியவர்கள் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவ்வாறான வீழ்ச்சிகள் எலும்பு முறிவு, தலையில் பலத்த காயம் அல்லது நீண்ட காலக் கட்டில் வாசம் போன்ற பாரிய பாதிப்புகளுக்கு வழிவகுக்கலாம். வீழ்ச்சிகளைத் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/how-to-prevent-falls-in-the-elderly-an-awareness/">முதியவர்கள் தவறி விழுவதைத் தடுப்பது எப்படி? &#8211; ஓர் விழிப்புணர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பொதுவாக எவர் வேண்டுமானாலும் தவறி விழுந்து காயமடையலாம். ஆனால், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இது மிக ஆபத்தான ஒன்றாக அமைகிறது. வயது முதிர்வினால் உடலில் ஏற்படும் தசை வலிமை குறைவு, சமநிலையைப் பேணுவதில் உள்ள சிரமம் மற்றும் கண்பார்வை அல்லது காது கேளாமை போன்ற குறைபாடுகளால் முதியவர்கள் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவ்வாறான வீழ்ச்சிகள் எலும்பு முறிவு, தலையில் பலத்த காயம் அல்லது நீண்ட காலக் கட்டில் வாசம் போன்ற பாரிய பாதிப்புகளுக்கு வழிவகுக்கலாம்.</p>
<p data-path-to-node="4"><b data-path-to-node="4" data-index-in-node="0">வீழ்ச்சிகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள்:</b></p>
<ul data-path-to-node="5">
<li>
<p data-path-to-node="5,0,0"><b data-path-to-node="5,0,0" data-index-in-node="0">உடற்பயிற்சி:</b> தினமும் எளிய உடற்பயிற்சிகளைச் செய்வது தசைகளை வலிமையாக்கும். இது நடக்கும்போது உடலின் சமநிலையைச் சரியாகப் பேண உதவும்.</p>
</li>
<li>
<p data-path-to-node="5,1,0"><b data-path-to-node="5,1,0" data-index-in-node="0">பரிசோதனைகள்:</b> கண்பார்வை மற்றும் காது கேட்கும் திறன் சரியாக உள்ளதா என்பதை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது அவசியம். அப்போதுதான் தரையில் உள்ள தடைகளை முதியவர்களால் இலகுவாகக் கண்டறிய முடியும்.</p>
</li>
<li>
<p data-path-to-node="5,2,0"><b data-path-to-node="5,2,0" data-index-in-node="0">மருந்து ஆலோசனைகள்:</b> சில மருந்துகள் தலைச்சுற்றல் அல்லது பலவீனத்தை ஏற்படுத்தலாம். எனவே, தாங்கள் உட்கொள்ளும் மருந்துகள் பற்றி குடும்ப மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது பாதுகாப்பானது.</p>
</li>
</ul>
<p data-path-to-node="6"><b data-path-to-node="6" data-index-in-node="0">வீட்டைப் பாதுகாப்பாக மாற்றுதல்:</b></p>
<p data-path-to-node="7">முதியவர்கள் வாழும் சூழலில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் விபத்துக்களை பெருமளவு குறைக்கலாம்.</p>
<ul data-path-to-node="8">
<li>
<p data-path-to-node="8,0,0">நடக்கும் பாதையில் தேவையற்ற பொருட்களைக் குவித்து வைக்காமல் அகற்றுதல்.</p>
</li>
<li>
<p data-path-to-node="8,1,0">வழுக்கும் தன்மையுள்ள தரை விரிப்புகள் (Rugs) அல்லது மிதியடிகளைத் தவிர்த்தல்.</p>
</li>
<li>
<p data-path-to-node="8,2,0">குளியலறை மற்றும் படிக்கட்டுகளில் பிடித்துச் செல்வதற்கு ஏதுவாக கைப்பிடிகளைப் (Handrails) பொருத்துதல்.</p>
</li>
<li>
<p data-path-to-node="8,3,0">வீடு முழுவதும், குறிப்பாக இரவு நேரங்களில் நடப்பதற்குப் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்தல்.</p>
</li>
</ul>
<p data-path-to-node="9"><b data-path-to-node="9" data-index-in-node="0">வீழ்ச்சி ஏற்பட்டால் என்ன செய்வது?</b></p>
<p data-path-to-node="10">ஒருவேளை முதியவர் எவராவது தவறி விழுந்துவிட்டால், அவருக்குக் கடுமையான வலி, நடப்பதில் சிரமம், மயக்கம் அல்லது குழப்பமான நிலை இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். விழுந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து, மீண்டும் அது நடக்காமல் பார்த்துக் கொள்வது அவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு மிக முக்கியமாகும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/how-to-prevent-falls-in-the-elderly-an-awareness/">முதியவர்கள் தவறி விழுவதைத் தடுப்பது எப்படி? &#8211; ஓர் விழிப்புணர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை &#8211; பூட்டான் இடையே விமான போக்குவரத்து ஒத்துழைப்பை வலுப்படுத்தப் புதிய இணக்கம்</title>
		<link>https://oruvan.com/bhutan-sri-lanka-discuss-strengthening-air-services-and-aviation-training-cooperation/</link>
		
		<dc:creator><![CDATA[Rasmila]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Mar 2026 06:59:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முகப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பூட்டான்]]></category>
		<category><![CDATA[விமான போக்குவரத்து]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47312</guid>

					<description><![CDATA[<p>இலங்கை மற்றும் பூட்டான் நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த விசேட கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றது. பூட்டான் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கின்லி வாங்சுக் (Kinley Wangchuk), இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கப்டன் தமிந்த ரம்புக்வெல்லவை (Capt. Daminda Rambukwella) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே சர்வதேச பயணிகள் போக்குவரத்து சேவைகளை விரிவுபடுத்துவது மற்றும் பூட்டான் மாணவர்களுக்கு இலங்கையில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/bhutan-sri-lanka-discuss-strengthening-air-services-and-aviation-training-cooperation/">இலங்கை &#8211; பூட்டான் இடையே விமான போக்குவரத்து ஒத்துழைப்பை வலுப்படுத்தப் புதிய இணக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை மற்றும் பூட்டான் நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த விசேட கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றது.</p>
<p>பூட்டான் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கின்லி வாங்சுக் (Kinley Wangchuk), இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கப்டன் தமிந்த ரம்புக்வெல்லவை (Capt. Daminda Rambukwella) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.</p>
<p>இரு நாடுகளுக்கும் இடையே சர்வதேச பயணிகள் போக்குவரத்து சேவைகளை விரிவுபடுத்துவது மற்றும் பூட்டான் மாணவர்களுக்கு இலங்கையில் விமான ஓட்டுநர் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவது குறித்து இதன்போது ஆராயப்பட்டது.</p>
<p>மத்திய கிழக்கு போர்ச் சூழலால் சர்வதேச விமான போக்குவரத்துத் துறை எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்துக் கலந்துரையாடிய இரு தரப்பினரும், முறையான வான்வழிச் சேவை ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/bhutan-sri-lanka-discuss-strengthening-air-services-and-aviation-training-cooperation/">இலங்கை &#8211; பூட்டான் இடையே விமான போக்குவரத்து ஒத்துழைப்பை வலுப்படுத்தப் புதிய இணக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையை உலுக்கியுள்ள நாமலில் ஒடிசா பயணம் &#8211; அரசாங்கத்துக்கு இராஜதந்திர எச்சரிக்கையா?</title>
		<link>https://oruvan.com/namals-odisha-visit-has-shaken-sri-lanka-is-it-a-diplomatic-warning-to-the-government/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jan 2026 04:56:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாமலில் ஒடிசா பயணம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44084</guid>

					<description><![CDATA[<p>இலங்கை அரசியலில் இந்தியா எப்போதுமே ஒரு மையப்புள்ளியாகவே இருந்து வருகிறது. தென்னிலங்கை அரசியலை புரட்டிபோடும் பல்வேறு அரசியல் நகர்வுகளில் இந்தியாவின் தேசியப் புலனாய்வு பிரிவான &#8216;ரோ&#8217; கடந்த காலங்களில் ஈடுபட்டுள்ளதை எவரும் மறுக்க முடியாது. அத்தகையதொரு நகர்வை மீண்டும் புதுடில்லி எடுக்கும் ஆலோசனைகளை விரைவில் மேற்கொள்ளலாம் என புதுடில்லியின் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மிகப் பெரிய மக்கள் எழுச்சிக்கு மத்தியில் இலங்கையில் 2024ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இந்தப் பின்புலத்தில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்துடன், இணக்கமான போக்கையே [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/namals-odisha-visit-has-shaken-sri-lanka-is-it-a-diplomatic-warning-to-the-government/">இலங்கையை உலுக்கியுள்ள நாமலில் ஒடிசா பயணம் &#8211; அரசாங்கத்துக்கு இராஜதந்திர எச்சரிக்கையா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை அரசியலில் இந்தியா எப்போதுமே ஒரு மையப்புள்ளியாகவே இருந்து வருகிறது.</p>
<p>தென்னிலங்கை அரசியலை புரட்டிபோடும் பல்வேறு அரசியல் நகர்வுகளில் இந்தியாவின் தேசியப் புலனாய்வு பிரிவான &#8216;ரோ&#8217; கடந்த காலங்களில் ஈடுபட்டுள்ளதை எவரும் மறுக்க முடியாது.</p>
<p>அத்தகையதொரு நகர்வை மீண்டும் புதுடில்லி எடுக்கும் ஆலோசனைகளை விரைவில் மேற்கொள்ளலாம் என புதுடில்லியின் வட்டாரங்களில் பேசப்படுகிறது.</p>
<p>மிகப் பெரிய மக்கள் எழுச்சிக்கு மத்தியில் இலங்கையில் 2024ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.</p>
<p>இந்தப் பின்புலத்தில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்துடன், இணக்கமான போக்கையே இந்தியா விரும்புகிறது.</p>
<p>அதன் பிரகாரமே இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட ஒருவருடத்துக்கு முன்பே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை புதுடில்லிக்கு அழைத்து சிவப்பு கம்பள வரவேற்பையும் இந்திய அளித்தது.</p>
<p>ஆட்சிமாற்றம் ஏற்பட்டு முதல் இராஜதந்திர பயணத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்தியாவுக்கே மேற்கொண்டிருந்தார்.</p>
<p>இந்திய விஸ்தரிப்பு வாதம் பற்றி 80களில் பேசிய ஜே.வி.பியும் அதன் தலைமைகளும் பூகோள அரசியல் போக்கை உணர்ந்துள்ளதன் காரணமாகவே இந்தியாவுடனான உறவை மீள புதுப்பித்துள்ளனர்.</p>
<p>இந்தியாவுக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான உறவு புதுபிக்கப்பட்டுள்ள போதிலும், அது ஓர் இணக்கப்பாட்டான சூழலுக்கு இன்னும் வரவில்லை என புதுடில்லி கருதுகிறது.</p>
<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதுடில்லிக்கு பயணம் மேற்கொண்டு ஒரு வருடத்தை கடந்துள்ள சூழலில் அந்தப் பயணத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தும் தீர்மானங்கள் எதுவும் இன்னமும் இலங்கையில் எடுக்கப்படவில்லை.</p>
<p>குறிப்பாக இருநாட்டுகளுக்கு இடையிலான கேபிள் குழாய் அமைப்பு, திகோணமலை எண்ணெய் குதங்கள் விவகாரத்தில் விரைவான தீர்மானங்கள் எடுக்கப்படமை உட்பட பல்வேறு வாக்குறுதிகள் குறித்த நகர்வுகள் ஆக்கப்பூர்வமானதாக இல்லை என்பதால் இந்தியா இலங்கைமீது சற்று அதிருப்தியில் உள்ளது.</p>
<p>இணக்கப்பாட்டான சூழலை அரசாங்கத்துடன், விரும்புவதை வெளிப்படுத்தும் நோக்கிலேயே டித்வா புயல் ஏற்பட்ட தருணத்தில் பல்வேறு உதவிகளை இந்தியா இலங்கைக்கு வழங்கியது.</p>
<p>என்றாலும், இலங்கையில் நகர்வுகள் குறித்து ஓரளவு அதிருத்தியில் மோடி அரசாங்கம் இருப்பதால்தான் ஒடிசாவில் நடைபெற்ற குடியரசு தினத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு பிரமாண்டமான வரவேற்பை புதுடில்லி அளித்துள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p>
<p>நாமல் ராஜபக்சவுக்கான வரவேற்பை சமகால அரசாங்கம் ஓர் எச்சரிக்கை மணியாக எடுக்க வேண்டும் என்பதே நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பின் இராஜதந்திர செய்தியாகும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p>
<p>நாமல் ராஜபக்சவுக்கு ஒடிசாவில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வில் வழங்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பு குறித்து அரசாங்கம் பல்வேறு ஆலோசனைகளை நடத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/namals-odisha-visit-has-shaken-sri-lanka-is-it-a-diplomatic-warning-to-the-government/">இலங்கையை உலுக்கியுள்ள நாமலில் ஒடிசா பயணம் &#8211; அரசாங்கத்துக்கு இராஜதந்திர எச்சரிக்கையா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
