சர்ரே பகுதி மிகவும் ஆபத்தான இடமாக அறிவிப்பு

சர்ரே பகுதி மிகவும் ஆபத்தான இடமாக அறிவிப்பு

பிரித்தானியாவில் சர்ரே பகுதி மிகவும் ஆபத்தான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எந்த முக்கிய நகரங்களையும் விட இந்த பகுதி மிகவும் ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு 2024ஆம் ஆண்டு ஜூன் முதல் 2025 ஜூன் வரையிலான பன்னிரண்டு மாத காலப்பகுதியில் சுமார் ஆறு பேர் மற்றவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாதம் வரையிலான ஆண்டில் இந்தப் பகுதியில் மேலும் மூன்று கொலைகள் நடந்துள்ளதாக உள்துறை அலுவலக பதிவுகள் தெரிவிக்கின்றன.

லண்டன் பெருநகரமான ஹாக்னியில், ஒன்பது தனித்தனி கொலைகள் அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட பின்னர், 100,000 பேருக்கு 3.44 என்ற விகிதத்தில் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், இந்தக் காலகட்டத்தில் பதிவான 518 கொலைகளில் 101 கொலைகள் தலைநகரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This