இன்று பலத்த காற்று வீசக் கூடும் – பொது மக்களுக்கு அவரச எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (15) பலத்த காற்று வீசும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய மலைநாடு மேற்கு சரிவுகளிலும், திருகோணமலை மாவட்டம் உட்பட வடக்கு, வடமத்திய, மேற்கு, சபரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் சில நேரங்களில் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
காலை 5:30 மணிக்கு (MET) வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் வானிலை எச்சரிக்கைகள் குறித்து புதுப்பித்த நிலையில் இருக்கவும், தேவைப்பட்டால் உதவிக்கு 117 அவசர தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.