ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய ஏர்பஸ் விமானம் – குறைந்த உயரத்தில் கொழும்பில் பறந்து சென்ற அழகிய காட்சி

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய ஏர்பஸ் விமானம் – குறைந்த உயரத்தில் கொழும்பில் பறந்து சென்ற அழகிய காட்சி

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணைந்துள்ள ஏர்பஸ் A330-200 அகல-உடல் விமானம் இன்று (04) இலங்கைக்கு வந்துள்ளது.

பாரிஸிலிருந்து வந்த இந்த விமானம், கொழும்பு மற்றும் கட்டுநாயக்க வழியாக இன்று காலை குறைந்த உயரத்தில் பறந்து உள்ளூர் பார்வையாளர்களுக்கு காட்சியளித்திருந்தது.

இன்று காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை, சுமார் 1,500 அடி உயரத்தில், கொழும்பு துறைமுக நகரத்தின் தெற்கு முனையிலிருந்து மொரட்டுவ வரை கடற்கரையோரமா இந்த விமான பறந்துச் சென்றது.

பின்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது.

இலங்கையை உலகத்துடன் இணைக்கும் நீண்ட தூர மற்றும் குறுகிய தூர நடவடிக்கைகளுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் குழுவில் இணைந்துள்ள இந்த விமானத்தின் முதல் வருகையை பார்வையாளர்கள் உற்சாகமான வரவேற்றிருந்தனர்.

Share This