உலகளாவிய தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு பின்னடைவு

2025 செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட சமீபத்திய ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு 2025 உலகளாவிய தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 97வது இடத்திற்குச் சரிந்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டிய நிலையில், 96ஆவது இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி 91வது இடத்திற்கு வந்தது,
இது 2024 ஆம் ஆண்டு 96வது இடத்திலிருந்து முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இருப்பினும், சமீபத்திய புதுப்பிப்பில், நாடு 97ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது. அதன் 2024 நிலையை விட ஒரு இடம் குறைவாக காணப்பட்டுள்ளது.
உலகளாவிய சூழலில், அமெரிக்க கடவுச்சீட்டு ஜூலை தரவரிசையில் இருந்து இரண்டு இடங்கள் சரிந்து 12ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது. இது குறியீட்டின் 20 ஆண்டுகால வரலாற்றில் மிகக் குறைந்த நிலையைக் குறிக்கிறது.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளன. மறுமுனையில், ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.