இலங்கையின் பொருளாதார மீட்சி எதிர்பார்த்ததை விட வேகமாக இருக்கின்றது – மத்திய வங்கி ஆளுநர்

இலங்கையின் பொருளாதார மீட்சி எதிர்பார்த்ததை விட வேகமாக இருக்கின்றது – மத்திய வங்கி ஆளுநர்

இலங்கையின் பொருளாதார மீட்சி ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட வேகமாக முன்னேறி வருவதாகவும், அடுத்த ஆண்டுக்குள் நாடு நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விஞ்சிவிடும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நெருக்கடியின் உச்சத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் எதிர்பார்த்ததை விட விரைவாக முடிவுகளைத் தருவதாக சர்நதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு நாடு நெருக்கடியால் பாதிக்கப்பட்டவுடன், உற்பத்தி இழப்பை மீட்டெடுக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும். எங்கள் விஷயத்தில், மூன்று ஆண்டுகளுக்குள் அந்த நிலையை அடைந்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டுக்குள், வேலைவாய்ப்பு, வறுமைக் குறைப்பு, வருமானம் மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற முக்கிய துறைகளில் இலங்கை நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விட சிறப்பாக இருக்கும் என்று ஆளுநர் நம்பிக்கை தெரிவித்தார்.

“அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் வருமானம் அதிகமாக இருக்கும் எனவும், அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், நாம் முன்பு இருந்த நிலையை அடைய முடியும்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share This