சுவிஸ் தேசிய கவுன்சிலின் உப தலைவராக இலங்கையர்

சுவிஸ் தேசிய கவுன்சிலின் உப தலைவராக இலங்கையர்

சுவிட்சர்லாந்து தேசிய கவுன்சிலின் இரண்டாவது உப தலைவராக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பாரா ரூமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து பெடரல் நாடாளுமன்றத்தில் இத்தகைய உயர்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் முதலாவது இலங்கையர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாரா ரூமி எதிர்வரும் வருடத்தின் ஆரம்பப்பகுதியில், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு, மருதானை, மாளிகாகந்தையைச் சேர்ந்த முகம்மது ரூமி மொஹிதீன் மற்றும் இஸ்ஃபியா ரூமி தம்பதியினரின் புதல்வியாவார்.

34 வயதுடைய தாதியரான பாரா ரூமி, வைத்திய நிபுணருமாவார்.

மேலும், கொழும்பு பிஷப் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் 1998 ஆம் ஆண்டில் இவர், குடும்பத்தினருடன் சுவிட்சர்லாந்திற்கு குடிபெயர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2021 முதல், ரூமி கிரென்சென் நகரத்திற்கான நகராட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். அவர் இயற்கைமயமாக்கல் ஆணையத்தின் உறுப்பினராகவும், ஸ்பைடெக்ஸ் கிரென்சென் வாரிய உறுப்பினராகவும் உள்ளார்.

கூடுதலாக, மாற்றுத்திறனாளிகளை ஆதரிக்கும் ரோடானியா அறக்கட்டளையின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றுகிறார்.

நாடாளுமன்றத்தில் அவரது முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகள் சுகாதாரக் கொள்கை, சமூகக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை மற்றும் சம வாய்ப்புகள் ஆகியவை அடங்கும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )