வெளிநாட்டில் இலங்கையர் ஒருவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் – லாட்டரி டிக்கெட்டில் பெரும் பரிசு

வெளிநாட்டில் இலங்கையர் ஒருவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் – லாட்டரி டிக்கெட்டில் பெரும் பரிசு

சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற பிக் டிக்கெட் அபுதாபி லாட்டரி வாராந்திர சீட்டிலுப்பில் 63 வயதான இலங்கையர் ஒருவர் 250 கிரோம் நிறைகொண்ட 24 கரட் தங்கத்தை பரிசாக வென்றுள்ளார்.

இரண்டு தசாப்தங்களாக சவுதி அரேபியாவில் வசித்து வரும் முகமது நலிம் என்ற இலங்கையர், 173160 என்ற டிக்கெட் எண்ணுடன் 250 கிராம் எடையுள்ள 24 கரட் தங்கத்தை வென்றுள்ளார்.

ரியாத்தில் உள்ள ஒரு முன்னணி வங்கியில் பணிபுரியும் நலிம், ஏழு ஆண்டுகளாக பிக் டிக்கெட்டுடனான தனது பயணம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் காலப்போக்கில் அவர் டிக்கெட் வாங்குவதை நிறுத்திவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், யூடியூப் மற்றும் சமூக ஊடக தளங்களில் பிக் டிக்கெட்டின் விளம்பர விளம்பரங்களை மீண்டும் பார்க்கத் தொடங்கிய பிறகு ஆர்வம் மீண்டும் தூண்டப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தனக்கு பரிசு கிடைத்துள்ளதை அவர் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

சவுதி அரேபியாவில் 19 ஆண்டுகள் கழித்த பின்னர், நலிமின் வெற்றி அவரது சக ஊழியர்கள் மற்றும் சக வெளிநாட்டினர் பலரையும் ஊக்கப்படுத்தியுள்ளது.

சாதாரண மக்களின் வாழ்க்கையை ஒரே இரவில் மாற்றியமைத்த பிக் டிக்கெட் அபுதாபியில் தங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சிக்க வங்கியில் உள்ள தனது நண்பர்களை ஏற்கனவே ஊக்குவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

“என் குடும்பம் இலங்கையில் வசிக்கிறது, நான் என் மனைவிக்கு தங்கக் கட்டியைப் பரிசளிக்க திட்டமிட்டுள்ளேன். அவர் அதை எங்கள் மகளுக்கு நகையாக மாற்றுவார்” என்று நலிம் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share This