இலங்கை ரக்பி சங்கத்திற்கு புதிய தலைவர்

இலங்கை ரக்பி சங்கத்திற்கு புதிய தலைவர்

இலங்கை ரக்பி சங்கத்தின் புதிய தலைவராக முன்னாள் ரக்பி தலைவர் பவித்ர பெர்னாண்டோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ரக்பி சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று (8) விளையாட்டு அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது அவரது பெயர் இந்தப் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற நடவடிக்கை காரணமாக இலங்கை ரக்பி சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் அவ்வப்போது தாமதமாகி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This