இலங்கை – இந்தியாவுக்கு இடையில் பாதுகாப்பை வலுப்படுத்த ஆலோசனை

இலங்கை – இந்தியாவுக்கு இடையில் பாதுகாப்பை வலுப்படுத்த ஆலோசனை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் இருநாட்டு பாதுகாப்புச் செயலாளர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

பாதுகாப்பு செயலாளர் எச்.எஸ்.சம்பத் துய்யகொந்த இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் இந்திய பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங்கை பெங்களூருவில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பில், சட்டவிரோத மீன்பிடித்தலை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகள், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளின் பாதுகாப்புப் படைகளுக்கான பயிற்சிகளை மேம்படுத்துதல் உட்பட பரஸ்பர ஆர்வமுள்ள முக்கிய துறைகள் குறித்து இருவரும் கவனம் செலுத்தினர்.

இருதரப்பு இராணுவ உறவுகளை மேலும் உறுதிப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் ஆழமான ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்தும் இருவரும் ஆலோசித்துள்ளனர்.

பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை திறம்பட சமாளிக்க உளவுத்துறையைப் பகிர்ந்து கொள்வது, கூட்டுப் பயிற்சிகளை நடத்துவது மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இருவரும் ஆராய்ந்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This