கண்டியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் ரயில் பயணிகளுக்காக நாளை விசேட பேருந்துகள் சேவையில்

கண்டியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் ரயில் பயணிகளுக்காக நாளை விசேட பேருந்துகள் சேவையில்

கண்டியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் ரயில் பயணிகளுக்காக நாளை (08) காலை விசேட பேருந்துகள் இயக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த விசேட பேருந்து சேவைகளில் பயணிகள் தங்கள் மாதாந்த ரயில் பருவச் சீட்டுகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார்.

இதன்படி, செல்லுபடியாகும் ரயில்பருவச் சீட்டுகளை வைத்திருக்கும் பயணிகளுக்கு காலை 4.00 மணி, அதிகாலை 4.15 மற்றும் அதிகாலை 4.30 க்கு பிரத்தியேகமாக போக்குவரத்து சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்ட சேவைகள் போதுமானதாக இல்லாவிட்டால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, கொழும்புக்கும் கண்டிக்கும் இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகளும் நாளை முதல் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புக்கும் கண்டிக்கும் இடையில் இயக்கப்படும் நீண்ட தூரப் பேருந்துகளுக்காக தெரிவு செய்யப்பட்ட பாதைகளான கண்டி, கட்டுகஸ்தோட்டை, கலகெதர, ஹதரலியத்த, ரம்புக்கன, கரண்டுபன, கேகாலை மற்றும் பஸ்யால வழியாக கொழும்புக்கு இயக்கப்படும்.

நீண்ட தூரப் பயணிகளின் போக்குவரத்து பாதுகாப்புக்காக இந்தப் பாதைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )