மாரவில பகுதியில் துப்பாக்கிச் சூடு – பெண் ஒருவர் உயிரிழப்பு

புத்தளம் மாவட்டம் மாரவில பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மரந்த பகுதியில் நேற்றரிவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் 10 சிறுவனும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 30 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளது.