
குர்திஸ்தான் மாகாணத்தில் தொடர் தாக்குதல் – 112 பேர் உயிரிழப்பு
ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தின் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் முன்னெடுத்துள்ள தாக்குதல்களில் இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
குர்திஸ்தான் மாகாண அவசரக்கால திணைக்களத்தின் தலைவரை மேற்கோள் காட்டி ‘தஸ்னிம்’ (Tasnim) செய்திச் சேவை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது .
இந்தத் தாக்குதல்களில் 969 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
காயமடைந்தவர்களில் 27 பேர் தற்போது பொது விடுதிகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் ஐவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது .
குர்திஸ்தான் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
CATEGORIES உலகம்
