தமிழ்நாட்டின் நிவாரண உதவி பொருட்கள் நாட்டிற்கு

தமிழ்நாட்டின் நிவாரண உதவி பொருட்கள் நாட்டிற்கு

டிட்வா புயல் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு இந்தியாவின் தமிழ்நாடு அரசு 950 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உதவிக் கப்பலை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவிப் பொருட்கள் கையளிக்கப்படவுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குறித்த உதவிப் பொருட்கள் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )