காதலர் தினத்தையொட்டி இந்தியாவிலிருந்து சிவப்பு ரோஜாக்கள் இறக்குமதி

உலகளாவிய ரீதியில் இன்று கொண்டாடப்படும் காதலர் தினத்தை முன்னிட்டு இந்தியாவிலிருந்து சிவப்பு ரோஜாக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிவப்பு ரோஜாக்களுக்கான கேள்வி அதிகமாக இருப்பதால் இவ்வாறு இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
இலங்கையில் காணப்படும் பெரும்பாலான ரோஜாக்கள் தோற்றத்தில் சிறியதாக காணப்படுவதால் அதனைக் கொள்வனவு செய்பவர்கள் அவற்றை அதிகம் விரும்புவதில்லை எனவும் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிவப்பு ரோஜாவிற்கு அதிக கேள்வி இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.