
புத்தளம் மார்க்க ரயில் சேவைகள் நாத்தாண்டிய வரை நீடிப்பு
கொச்சிக்கடைக்கும் நாத்தாண்டியவிற்கும் இடையிலான ரயில் மார்க்கத்தில் சீர்த்திருத்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, புத்தளம் மார்க்கத்தில் ரயில் சேவைகள் தற்போது நாத்தாண்டிய வரை நீடிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, அண்மைக் காலமாக இந்தப் பிரிவில் ரயில்கள் கொழும்பு கோட்டைக்கும் கொச்சிக்கடை ரயில் நிலையத்திற்கும் இடையில் மாத்திரமே இயக்கப்பட்டன.
சீர்த்திருத்தப் பணிகள் இப்போது நிறைவடைந்துள்ளதால், கொழும்பு கோட்டையிலிருந்து நாத்தாண்டிய வரை ரயில் சேவைகள் முழுமையாகத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
