இந்த ஐந்து பொருட்களையும் தலையணைக்கு அடியில் வைத்து உறங்குங்கள்…என்ன பலன் தெரியுமா?

இந்த ஐந்து பொருட்களையும் தலையணைக்கு அடியில் வைத்து உறங்குங்கள்…என்ன பலன் தெரியுமா?

நாம் உறங்கும்போது தலையணைக்கு கீழ் ஒரு சில பொருட்களை வைப்பதன் மூலம் எதிர்மறை விடயங்களை துரத்த முடியும் எனவும் திருமணம் கைகூடும் எனவும் கூறப்படுகிறது.

கிராம்பு – ஒரு சிலருக்கு இரவில் உறங்கும்போது கெட்ட சொப்பனங்கள் வந்து உறக்கத்தை கெடுக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கிராம்பை தலையணைக்கு அடியில் வைத்து உறங்கும்போது எதிர்மறை சக்திகள் தடுக்கப்படும்.

எலுமிச்சைப் பழம் – நேர்மறை ஆற்றல், தெய்வீக சக்தி கொண்ட எலுமிச்சைப் பழத்தை தலையணைக்கு அடியில் வைத்து உறங்கினால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

ஏலக்காய் – ஏலக்காயை தலையணைக்கு அடியில் வைத்து உறங்கினால் செல்வம் அதிகரிக்கும். மேலும் இதிலிருந்து வெளிவரும் சக்தி ஆழ்மனத்துக்கு சக்தியைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

விரலி மஞ்சள் – மஞ்சள் புனிதமான ஒரு பொருள். அத்தகைய மஞ்சளை தலையணைக்கு அடியில் வைத்து உறங்கினால் திருமணத் தடை நீங்கும், காதல் கைகூடும் எனக் கூறப்படுகிறது.

ஜாதிக்காய் – மகாலட்சுமியின் அம்சத்தைக் கொண்டது ஜாதிக்காய். இதனை தலையணைக்கு அடியில் வைத்து உறங்கும்போது தொழிலில் இலாபம் வந்து சேரும் எனக் கூறப்படுகிறது.

 

Share This