தாய்லாந்து செல்லவுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய

தாய்லாந்து செல்லவுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய

ஆறாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய தாய்லாந்து செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த உச்சிமாநாடு ஏப்ரல் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் பாங்கோக்கின் உறுப்பு நாடுகளின் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறும்.

பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

இதன்போது வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This