நாடு திரும்பினார் ஜனாதிபதி

நாடு திரும்பினார் ஜனாதிபதி

2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) காலை மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

இந்த பயணத்தின் போது ஜனாதிபதி பல அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதேவேளை, நேற்று (02) மாலை உலக அரச உச்சி மாநாட்டில் உரையாற்றியிருந்தார்.

உலக காலநிலை பிரச்சினைகள் வறியவர் செல்வந்தர் என்று பாராமல் அனைவரினதும் கதவுகளை தட்டிக்கொண்டிருப்பதாகவும், தேச எல்லைகளைக் கடந்து பயணிக்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்க நாங்கள் உலகளாவிய பிரஜைகள் என்றவகையில் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share This