ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

ஜனாதிபதி வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

இதன்படி எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதியிலிருந்து 6 ஆம் திகதி வரை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியட்நாமில் தங்கியிருப்பார் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share This