பிரசன்ன ரணவீர நீதிமன்றில் சரணடைந்தார்

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர மஹர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.
அரச காணி ஒன்றுக்கு போலியான ஒரு உறுதிப்பத்திரம் செய்து அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில்
தொடரும் வழக்கில் ஆஜராகமையால் அவருக்கு பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று அவர் தனது சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் மேவின் சில்வாவும் இக்குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்