பிரபாகரனுக்கு என்றும் என் மரியாதை உண்டு

“போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது எனக்குத் தனிமரியாதை உண்டு.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பிரபாகரன் எமது எதிரணியாக இருந்தாலும், தப்பியோடாமல் இறுதி வரை சமரிட்டார். அதற்குரிய கௌரவத்தை அவருக்கு நான் வழங்கி வருகின்றேன்.
போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை பிரபாகரன் போரிட்டார்.
எனவே, இந்த விடயத்துக்காக முன்னாள் இராணுவத் தளபதி என்ற அடிப்படையில் பிரபாகரன் மீது எனக்கு எப்போதும் தனியான மரியாதை உள்ளது.” – என்றார்.