
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதிக்கு பூட்டு
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியானது, அனைத்து வகையான வாகனப் போக்குவரத்துக்காகவும் இன்று (27) முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை முற்றாக மூடப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இவ்வீதியின் மன்னம்பிட்டி – கல்லெல்ல பகுதி நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தேவைக்கேற்ப ரயில் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
