சர்வதேச சிவப்பு அறிவிப்பு இல்லாமல் பிடிபட்ட பொடி லெசி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

சர்வதேச சிவப்பு அறிவிப்பு இல்லாமல் பிடிபட்ட பொடி லெசி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் இல்லாமல் இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வுட்லர் கூறுகிறார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பொடி லெசி’ எனப்படும் அருமஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வாவை நாடு கடத்துவது குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்படி, சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்ட 29 சந்தேக நபர்கள் 2024 முதல் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

“தற்போதுள்ள இந்த அரசு பொறிமுறையின் மூலம், 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்ட 29 சந்தேக நபர்களை இந்த நாட்டிற்கு அழைத்து வர முடிந்தது.

அதேபோல், இன்று (27) அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் உட்பட 14 பேர் சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்புகள் இல்லாமல் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

நாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வு குற்றங்கள் தொடர்பாக பொலிஸ்மா அதிபரின் நேரடி தலையீடு, அந்தந்த நாடுகளின் நம்பிக்கை மற்றும் பொலிஸ்மா அதிபரின் முழு மத்தியஸ்தம் மூலம், சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவிப்புகள் இல்லாமல் இந்த சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர முடிந்தது.

மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக 89 சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டில் இந்த சந்தேக நபர்களை நாட்டிற்கு கொண்டு வர நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )