ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பிரதமர் மோடிக்கு தொடர்பு இல்லை-  இந்திய வெளியுறவு அமைச்சகம்

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பிரதமர் மோடிக்கு தொடர்பு இல்லை- இந்திய வெளியுறவு அமைச்சகம்

‘எப்ஸ்டீன் கோப்புகள்’ தொடர்பான மின்னஞ்சல் செய்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோட ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்தார் என் வெளியான கூற்றுகளை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நிராகரித்துள்ளார்.

அமெரிக்க பாலியல் குற்றவாளியும் மனித கடத்தல்களில் ஈடுபட்டவருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் பிரதமர் மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் நேற்று சனிக்கிழமை (ஜனவரி 31) குற்றம் சுமத்தியது.

இந்நிலையில் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் “எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுபவற்றில் ஒரு மின்னஞ்சல் செய்தி பற்றிய அறிக்கையை பெற்றதாகவும் அதில் பிரதமர்  மோடி மற்றும் அவரது இஸ்ரேல் பயணம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )