சீதாவக பிரதேச சபை தவிசாளருக்கு எதிரான மனு தள்ளுபடி

சீதாவக பிரதேச சபை தவிசாளருக்கு எதிரான மனு தள்ளுபடி

மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீதாவக பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதைத் தடுத்து, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தன.சீதாவக பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இதேவேளை, இந்த விடயங்களை முன்வைத்து மாவதகம மற்றும் சீதாவக்க நகர சபை சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

 

Share This